NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி
    திருச்சியினை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி

    எழுதியவர் Nivetha P
    Jul 23, 2023
    06:32 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்த வார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி : திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் அருகில்லுள்ள லலிதா ஜுவல்லரி கடையில் கடந்த 2019ம்ஆண்டு அக்டோபர் மாதம் 2ம்தேதி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

    அந்நிறுவனத்தின் காம்பவுண்ட் சுவரில் பெரியளவில் ஓட்டை ஒன்று போடப்பட்டு அதன்வழியே கொள்ளையடிக்க வந்த மர்மஆசாமிகள் கடைக்குள் நுழைந்துள்ளனர்.

    இந்த கடைக்கு 6 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், உள்ளே நுழைந்த கொள்ளைக்காரர்கள் மிக நிதானமாக கடையில் இருந்த ரூ.50 கோடி நகைகளை கொள்ளையடித்து வெறும்காலி அட்டைப்பெட்டிகளை விட்டுச்சென்ற பரிதாபம் நிகழ்ந்தது.

    வெகுநாட்களாக திட்டமிட்ட பிறகே இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியிருக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

    இது குறித்து அறிந்த அமல்ராஜ் உடனே நேரடியாக வந்து ஆய்வினை மேற்கொண்டார்.

    கொள்ளை 

    குழந்தைகள் அணியும் பொம்மை மாஸ்கினை அணிந்த கொள்ளையர்கள் 

    இதனிடையே, கடையினை கொள்ளையடிக்க வந்த 2 நபர்கள் தங்கள் முகம் கேமராக்களில் பதிவாகாமல் இருக்க குழந்தைகள் அணியும் பொம்மை மாஸ்கினை அணிந்துள்ளனர்.

    கிட்டத்தட்ட 1 1/2மணிநேரம் இந்த கொள்ளையர்கள் கடைக்குள் இருந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது கேமராப்பதிவுகள் மூலம் தெரியவந்தது.

    இந்த கொள்ளையர்களை கண்டறிய மோப்பநாய்களை போலீசார் பயன்படுத்தியநிலையில் மிளகாய் பொடியினை தூவிச்சென்றதன் காரணமாக மோப்பநாய்களால் கண்டறிய முடியவில்லை.

    இதனைத்தொடர்ந்து, கொள்ளையர்களை கைது செய்ய 7தனிப்படைகளை அமைத்த போலீசார் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இத்தகைய துணிகரச்சம்பவம் அப்பகுதி சாதாரண மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

    முன்னதாக சமயபுரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த கொள்ளை போலவே இதுவும் நடந்திருந்தநிலையில், காவல்துறை தனது கவனத்தினை வடமாநிலத்தவர்கள் மீது திருப்பினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    கொள்ளை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  உச்ச நீதிமன்றம்
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக

    கொள்ளை

    சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் நகைகளை அடகு வைத்த அர்ச்சகர்-6 ஆண்டு சிறை  சிங்கப்பூர்
    ரூ.8½ கோடி கொள்ளையடித்த தம்பதியை ஜூஸ் கொடுத்து மடக்கிய போலீஸ்  பஞ்சாப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025