NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர் 
    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர் 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 05, 2023
    05:09 pm
    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர் 
    அவர்களது ஜந்தர் மந்தர் போராட்டம் கடந்த வாரம் டெல்லி போலீஸாரால் கலைக்கப்பட்டது.

    மல்யுத்த சம்மேளத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள்-சக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர். சக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் மே 31அன்று தங்கள் வேலையை மீண்டும் தொடங்கினர். கடந்த ஏப்ரல் முதல், டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் அவர்கள் பிரிஜ் பூஷனை கைது செய்யவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வந்தனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    2/2

    இது நீதிக்கான எங்கள் போராட்டம், நாங்கள் பின்வாங்க மாட்டோம்: சக்ஷி மாலிக்

    இந்நிலையில், அவர்களது ஜந்தர் மந்தர் போராட்டம் கடந்த வாரம் டெல்லி போலீஸாரால் கலைக்கப்பட்டது. இருந்தும் அவர்கள் ஓயவில்லை. விவசாய குழுக்களின் உதவியோடு அவர்கள் தங்கள் போராட்டங்களை தொடர்ந்து கொண்டிருந்தனர். மேலும், கடந்த சனிக்கிழமை அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், அவர்கள் போராட்டத்தில் இருந்து விலகி தங்கள் ரயில்வே பணியில் மீண்டும் சேர்ந்ததாக இன்று ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சக்ஷி மாலிக், "இது நீதிக்கான எங்கள் போராட்டம். நாங்கள் பின்வாங்க மாட்டோம். நாங்கள் ரயில்வேயில் எங்கள் பணிகளை மீண்டும் தொடங்கி உள்ளோம். ஆனால் அடுத்த என்ன செய்யலாம் என்பதையும் திட்டமிட்டு கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மல்யுத்த வீரர்கள்
    இந்தியா
    பிரிஜ் பூஷன் சரண் சிங்
    அமித்ஷா

    மல்யுத்த வீரர்கள்

    ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை  இந்தியா
    மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் கூட்டாக அறிக்கை! இந்திய அணி
    பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி இந்தியா
     மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு   இந்தியா

    இந்தியா

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது சிபிஐ
    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில் பீகார்
    தேசிய அளவில் மீண்டும் முதலிடத்தை பிடித்த IIT மெட்ராஸ் கல்லூரி
    விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ், மீண்டும் தனது சேவையை துவங்கியது  ரயில்கள்

    பிரிஜ் பூஷன் சரண் சிங்

    விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மல்யுத்த வீரர்கள் கோரிய 5 கோரிக்கைகள்  இந்தியா
    ஜூன் 15க்குள் பாலியல் புகார் விசாரணை முடிவு! இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல்! அனுராக் தாக்கூர் அறிவிப்பு! மல்யுத்த வீரர்கள்
    இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பிற்கு ஜூலை 4இல் தேர்தல் மல்யுத்தம்
    பிரிஜ் பூஷண் வழக்கு: 5 நாடுகளிடம் உதவி கோரி இருக்கும் டெல்லி போலீஸ்  இந்தியா

    அமித்ஷா

    ஜூன் 8 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம்
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  மணிப்பூர்
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023