NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 18 நக்சல்கள் பலி; 2 போலீசார் காயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 18 நக்சல்கள் பலி; 2 போலீசார் காயம்

    சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 18 நக்சல்கள் பலி; 2 போலீசார் காயம்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 16, 2024
    06:13 pm

    செய்தி முன்னோட்டம்

    சத்தீஸ்கர்: காங்கேர் மாவட்டத்தின் சோட்டபெத்தியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் போலீஸாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்து வரும் என்கவுன்டரில் குறைந்தது 18 நக்சல்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் ஒரு உயர்மட்ட மாவோயிஸ்ட் தலைவரும் உள்ளார்.

    இந்த மோதலில், இரண்டு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.

    என்கவுன்டர் இன்னும் நடந்து வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    கான்கர் மாவட்டத்தில் ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் வாக்களிப்பு நடைபெற இருக்கும் நிலையில், இந்த என்கவுண்டர் நிகழ்ந்துள்ளது.

    2008 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்காக அமைக்கப்பட்ட மாவட்ட ரிசர்வ் காவலர்களின் கூட்டுப் படைக்கும், எல்லைப் பாதுகாப்புப் படைக்கும் இடையே மதியம் 1:30 மணிக்கு மேல் சண்டை தொடங்கியது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

    சத்தீஸ்கர்

    கடந்த மாதம்  காங்கேர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டர் 

    கடந்த மாதம் காங்கேர் மாவட்டத்தில் மற்றொரு என்கவுன்டர் நடந்தது. அதில் இரண்டு பேர் - ஒரு மாவோயிஸ்ட் மற்றும் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர்.

    மேலும் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி, சில வெடிபொருட்கள் மற்றும் பிற குற்றஞ்சாட்டக்கூடிய பொருட்களை மீட்டனர்.

    இந்த நடவடிக்கையில் எல்லைப் பாதுகாப்புப் படையுடன் மாநில காவல்துறையின் இரு பிரிவுகளான டிஆர்ஜி மற்றும் பஸ்தார் ஃபைட்டர்ஸின் பணியாளர்கள் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு நவம்பரில், மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த போது, ​​அதே மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. அந்த என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து அக்-47 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சத்தீஸ்கர்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    சத்தீஸ்கர்

    2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு குவியும் பாராட்டு இந்தியா
    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட  பாஜக  பாஜக
    ஜூஸ் கடை முதல், 200 கோடி ரூபாய் சொத்து வரை: மஹாதேவ் சூதாட்ட செயலியின் பின்னணி என்ன? இந்தியா
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025