NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை மேலும் ரூ.30 அதிகரிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை மேலும் ரூ.30 அதிகரிப்பு 
    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை மேலும் ரூ.30 அதிகரிப்பு

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை மேலும் ரூ.30 அதிகரிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jul 08, 2023
    11:47 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சிலநாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்த விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் இருக்கிறது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    கனமழை மற்றும் வரத்துக்குறைவு காரணமாக தக்காளியின் விலை தற்போது உச்சத்தினை தொட்டுள்ளது.

    சில இடங்களில் தக்காளி விலை ரூ.150க்கு மேல் விற்பனையாகிறது என்றும் கூறப்படுகிறது.

    தக்காளி சாகுபடி சீரான நிலையினை அடைய இன்னும் 2-3வாரங்கள் ஆகலாம் என்று தெரிகிறது.

    இதனால் மக்கள் நலன்கருதி தமிழகஅரசு தங்களால் இயன்ற முயற்சியினை செய்து மக்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அதிலொன்று தான் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை.

    சோதனை முயற்சியாக சென்னையில் மட்டும் 90 ரேஷன்கடைகளில் தக்காளி கடந்த 2 நாட்களாக ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

    விலையுயர்வு 

    பச்சை மிளகாய் விலையும் இரு மடங்கு அதிகரிப்பு 

    அதன்படி, ஒரு ரேஷன் அட்டைக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே என்னும் வீதத்தில் காலை 1-2 மணிநேரம் மட்டுமே இந்த விற்பனை நடந்துவருகிறது.

    இதனிடையே, நேற்று(ஜூலை.,7)தக்காளி விலையானது சற்றுக்குறைந்து ஒரு கிலோ ரூ.90க்கு விற்பனையானது.

    ஆனால் தற்போது மீண்டும் இன்று(ஜூலை.,8) ஒரு கிலோ தக்காளி ரூ.30 அதிகரித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

    முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.90ல் இருந்து ரூ.120ஆக அதிகரித்து விற்கப்படுகிறது.

    சிறிய ரக தக்காளி ஒரு கிலோ ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும், நேற்று வரை ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனையான பச்சைமிளகாய் இன்று ரூ.100க்கு விற்கப்படுகிறது.

    அதே போல் பீன்ஸ் ஒரு கிலோக்கு ரூ.30 அதிகரித்து ரூ.110க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    தமிழ்நாடு

    பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம் பொறியியல்
    வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்: மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு  தேர்தல் ஆணையம்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது இந்தியா

    சென்னை

    மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண டோக்கன் வழங்க முடிவு  தமிழ்நாடு
    டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பொது சுகாதாரத்துறை  டெங்கு காய்ச்சல்
    செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து கருதி அவரை காவலில் எடுக்கவில்லை - அமலாக்கத்துறை  தமிழ்நாடு
    ஆருத்ரா வழக்கில் 3000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தயார் - குற்றப்பிரிவு போலீசார் தகவல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025