NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம்
    அவர் தனது விளைபொருட்களை கர்நாடகாவில் உள்ள கோலார் சந்தையில் விற்று பணமாக்கினார்.

    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 30, 2023
    04:21 pm

    செய்தி முன்னோட்டம்

    தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் 40,000 பெட்டி தக்காளியை விற்று 45 நாட்களில் 3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார்.

    சித்தூரை சேர்ந்த தக்காளி விவசாயி சந்திரமௌலி, தனது 22 ஏக்கர் விவசாய நிலத்தில், ஏப்ரல் முதல் வாரத்தில் அரிய வகை தக்காளி செடியை விதைத்தார்.

    ஜூன் மாத இறுதிக்குள் தக்காளியை விளைய வைக்க வேண்டும் என்பதற்காக அவர், தழைக்கூளம் மற்றும் நுண்ணீர் பாசனம் போன்ற மேம்பட்ட நுட்பங்களை செயல்படுத்தினார். அதில் வெற்றியும் கண்டார்.

    அதன் பிறகு, அவர் தனது விளைபொருட்களை கர்நாடகாவில் உள்ள கோலார் சந்தையில் விற்று பணமாக்கினார்.

    பிஹேவ்

    1 கோடி முதலீடு செய்து 3 கோடி ரூபாய் லாபம் பார்த்த விவசாயி 

    கடந்த 45 நாட்களில் அவரது 40,000 தக்காளி பெட்டிகள் விற்பனையானது. அப்போது, 15 கிலோ தக்காளியின் விலை ரூ.1,000-ரூ.1,500ஆக இருந்தது.

    தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சந்திரமௌலி, "இதுவரை கிடைத்த விளைச்சலில் ரூ.4 கோடி சம்பாதித்துள்ளேன். ஒட்டுமொத்தமாக எனது 22 ஏக்கர் நிலத்தில் ரூ.1 கோடி முதலீடு செய்து விளைச்சலை பெற வேண்டியிருந்தது. கமிஷன் மற்றும் போக்குவரத்து கட்டணங்களும் இதில் அடங்கும். அதனால், லாபம் ரூ. 3 கோடியாக இருக்கும்." என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், இந்தியாவின் மிகப்பெரிய தக்காளி சந்தைகளில் ஒன்றான ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மதனப்பள்ளியில் தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை(ஜூலை-28), இந்த சந்தையில் முதல்தர தக்காளியின் விலை அதிர்ச்சியூட்டும் வகையில் ரூ.200ஆக இருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    விவசாயிகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஆந்திரா

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு முதல் அமைச்சர்
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் தெலுங்கானா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து தெலுங்கானா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா

    விவசாயிகள்

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  நெய்வேலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025