LOADING...
குரூப் தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு; நவம்பர் 23க்குள் இதை பண்ணிடுங்க; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் 4 தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

குரூப் தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு; நவம்பர் 23க்குள் இதை பண்ணிடுங்க; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 15, 2025
09:14 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 (குரூப் 4) மூலம் நேரடி நியமனத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்களுக்கு, விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது. தேர்வர்கள் பதிவேற்றம் செய்த சான்றிதழ்களைக் கணினி வழித் திரைச் சரிபார்ப்புக்கு உட்படுத்தியபோது, சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களைக் குறைபாடுடனோ அல்லது தவறாகவோ பதிவேற்றம் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தத் தேர்வர்களுக்கு இறுதிவாய்ப்பு வழங்கும் விதமாக, வருகிற நவம்பர் 23 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்

சான்றிதழ் சிக்கல் உள்ள தேர்வர்களுக்கு மட்டும் அறிவுறுத்தல் 

குறைபாடுடைய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்த தேர்வர்களுக்கு மட்டும் இந்தத் தகவல் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (Email) மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்தத் தேர்வர்கள் அனைவரும் தங்களது குறிப்பாணையில் (Memorandum) தெரிவிக்கப்பட்ட சான்றிதழ்களை, தேர்வாணையத்தின் இணையதளத்தில் உள்ள தங்களது ஒருமுறைப் பதிவு (OTR) தளம் வாயிலாக மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும். உரிய காலக்கெடுவிற்குள் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யத் தவறும் தேர்வர்களின் உரிமைகோரல் விண்ணப்பம் எவ்விதக் கருணையும் இன்றி நிராகரிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி செயலாளர் எச்சரித்துள்ளார். முன்னதாக, இந்த குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.