NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பைக் டாக்சிகள் ஓட்டினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை: ஏன் இந்த திடீர் உத்தரவு?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பைக் டாக்சிகள் ஓட்டினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை: ஏன் இந்த திடீர் உத்தரவு?
    பைக் டாக்சிகள் ஓட்டினால் சட்டப்படி நடவடிக்கை

    பைக் டாக்சிகள் ஓட்டினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை: ஏன் இந்த திடீர் உத்தரவு?

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 11, 2024
    12:41 pm

    செய்தி முன்னோட்டம்

    வணிக நோக்கத்தில் பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களின் மீதான நடவடிக்கையை எடுக்க, அனைத்து மண்டல அலுவலர்களும், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த சில காலமாக கார் மற்றும் ஆட்டோ பயன்பாட்டுடன், பைக் டாக்ஸி சேவையின் பயணம் முக்கிய நகரங்களில் அதிகரித்து வருகிறது.

    குறைந்த செலவில் பயணிக்க விரும்புவோர், அதே நேரத்தில் விரைந்து இடம் அடைய விரும்புவோரின் முதல் விருப்பமாக இந்த பைக் டாக்சிகள் செயல்பட்டு வருகிறது.

    குறிப்பாக ஓலா மற்றும் ராபிடோவில் பைக் டாக்ஸி பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறைந்த கட்டணம் மற்றும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இது உதவியாக இருப்பதாக மக்கள் கருதுவதால், பைக் டாக்ஸிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    மனு

    தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் மனு 

    ஏற்கனவே வணிக பயன்பாட்டிற்கு பைக் பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனினும் அதையும் மீறி பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருவதால், தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் இந்த விஷயத்தில் மனு அளித்துள்ளது.

    அந்த மனுவை பரிசீலித்த போக்குவரத்து துறை ஆணையர் இந்த தடை உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளார்.

    இந்த நடவடிக்கையை அமல்படுத்த, கள அலுவலர்கள் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மண்டலம் வாரியாக தினசரி அறிக்கை மாலை 7 மணிக்கு அனுப்ப வேண்டும் எனவும் போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    விளக்கம்

    போக்குவரத்துத்துறை அமைச்சரின் விளக்கம் என்ன?

    இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், பைக் டாக்ஸி விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார்.

    "ஏற்கனவே மத்திய அரசு பைக்குகளை வாடகை ரீதியாக இந்தியா முழுவதும் பயன்படுத்த அனுமதித்துள்ளது. இதுகுறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பைக் டாக்ஸிக்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். பைக் டாக்ஸி பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது, அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவுகிறது" என தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பைக்
    வாகனம்
    போக்குவரத்து விதிகள்
    போக்குவரத்து

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19

    பைக்

    எக்ஸ்பல்ஸ் 400 பைக் மாடலை சோதனை செய்து வரும் ஹீரோ.. எப்போது வெளியீடு? ஹீரோ
    அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியான டாப் 5 ஆட்டோமொபைல்கள் கார்
    இந்தியாவில் சாகச சுற்றுலாவுக்கு ஏற்ற புதிய பைக் மாடலை அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    2023 EICMA நிகழ்வில் அறிமுகமாகியிருக்கும் இந்திய வெளியீட்டிற்கு சாத்தியமுள்ள புதிய பைக்குகள்  பைக் நிறுவனங்கள்

    வாகனம்

    கார்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வாகன உற்பத்தியாளர்கள் முடிவு கார்
    பிஎல்ஐ திட்டத்தின் கீழ் அனைத்து வாகனங்களுக்கும் ஒப்புதல் பெற்ற முதல் நிறுவனம் ஆனது பஜாஜ் ஆட்டோ ஆட்டோமொபைல்
    வெளிநாட்டு ஏற்றுமதியிலும் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது மாருதி சுசுகி மாருதி
    தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு; செப்டம்பர் 1 முதல் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமை தமிழகம்

    போக்குவரத்து விதிகள்

    தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை தமிழ்நாடு
    வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் தாம்பரம் வழியே செல்ல அனுமதி தமிழ்நாடு
    போக்குவரத்தில் ஒழுங்கீனமான நகரம் என்றால் டெல்லி தான்! இன்போசிஸ் நாராயண மூர்த்தி தொழில்நுட்பம்
    உலகின் சிறந்த ஓட்டுநர்கள் தரவரிசை - ஜப்பான் முன்னிலை, பின்னுக்கு சென்ற இந்தியா! வாகனம்

    போக்குவரத்து

    விரைவில் இந்தியாவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் அறிமுகம்; இதுபற்றி மேலும் சில தகவல்கள் இந்தியா
    பெங்களூரில் சோதனையில் உள்ள ஜப்பானிய போக்குவரத்து சிக்னல் தொழில்நுட்பம் பெங்களூர்
    சென்னையில் மீண்டும் வந்துவிட்டது ஹாப்-ஆன்; ஹாப்-ஆஃப் வசதி சென்னை
    சென்னை மக்களின் கவனத்திற்கு; அடுத்த 3 மாதத்திற்கு போக்குவரத்தில் மாற்றம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025