NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெட் பட்டதாரிகள் சங்கத்தினருடனான அன்பில் மகேஷின் பேச்சுவார்த்தை தோல்வி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெட் பட்டதாரிகள் சங்கத்தினருடனான அன்பில் மகேஷின் பேச்சுவார்த்தை தோல்வி 
    டெட் பட்டதாரிகள் சங்கத்தினருடனான அன்பில் மகேஷின் பேச்சுவார்த்தை தோல்வி

    டெட் பட்டதாரிகள் சங்கத்தினருடனான அன்பில் மகேஷின் பேச்சுவார்த்தை தோல்வி 

    எழுதியவர் Nivetha P
    Oct 31, 2023
    02:28 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் பொழுது 'டெட்' என்று கூறப்படும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் பெற மற்றொரு போட்டி தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை வெளியானது.

    இந்த அரசாணையினை தற்போதைய ஆளும் கட்சி திமுக ரத்து செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் தற்போது அதனை ரத்து செய்யாமல் தமிழகத்திலுள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு நடத்தப்படுவதாக அண்மையில் அரசு ஓர் அறிவிப்பினை வெளியிட்டது.

    அதன்படி வரும் ஜனவரி 7ம் தேதி இந்த போட்டி தேர்வு நடக்கவுள்ளது என்றும்,

    அதற்கான முன்பதிவு நாளை(நவம்பர்.,1) ஆன்லைனில் துவங்கவுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    எதிர்ப்பு 

    பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு 

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டெட் பட்டதாரி ஆசிரியர்கள், இந்த தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்றும்,

    டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் வழங்க கோரியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், இன்று(அக்.,31) இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டெட் ஆசிரியர்கள் சங்கத்தினரின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.

    அதனடிப்படையில் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.

    அப்போது அவர், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே பணி நியமனத்திற்கான தேர்வுகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறியதாக தெரிகிறது.

    ஆனால் அதனை ஏற்கவில்லை என்பதால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

    இதனிடையே, இது குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக டெட் ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளிக்கல்வித்துறை
    தேர்வு
    அதிமுக
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்

    பள்ளிக்கல்வித்துறை

    தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகள் திறப்பு - ஜூன் 7ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்  தமிழ்நாடு
    12ம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    சென்னையில் 2வது சர்வதேச புத்தக கண்காட்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு  புத்தக கண்காட்சி

    தேர்வு

    பொது வினாத்தாள் முறை: 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை காலாண்டு தேர்வு தொடக்கம் பள்ளி மாணவர்கள்
    தொடரும் NEET தற்கொலைகள்: கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவன் தற்கொலை ராஜஸ்தான்
    டிசம்பர் மாதம் நடைபெறும் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவங்கியது  மாற்றுத்திறனாளி
    சென்னை பல்கலைக்கழகம் - ஆன்லைனில் பி.காம், பிபிஏ இளநிலை கல்வி சென்னை

    அதிமுக

    ரவீந்திரநாத் வெற்றி செல்லாது : மக்களவையில் ஒரு எம்பி கூட இல்லாத கட்சியாக மாறிய அதிமுக தேனி
    அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்  திமுக
    மதுரையில் நடக்கவுள்ள அதிமுக மாநாடு - நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை  மதுரை
    அனைத்து கட்சி கூட்டம் - அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் பங்கேற்பு  நாடாளுமன்றம்

    தமிழ்நாடு

    மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் காலமானார்  செங்கல்பட்டு
    தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் சென்னை
    மறைந்த பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தமிழ்நாடு செய்தி
    தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி நிறுத்தம்? தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025