NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம்
    இந்தியா

    இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம்

    இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம்
    எழுதியவர் Nivetha P
    Mar 31, 2023, 05:32 pm 0 நிமிட வாசிப்பு
    இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம்
    இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம்

    தமிழகத்தில் இன்று(மார்ச்.,31) ஒரே நாளில் மணப்பாறை முறுக்கு, ஆத்தூர் வெற்றிலை, மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் பிரம்பு வேலைப்பாடு, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞரான சஞ்சய்காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தஞ்சையில் நிரூபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான சட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. அதன்படி தமிழகத்தில் ஏற்கனவே தஞ்சாவூர் வீணை, பொம்மை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போன்ற 45 பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. என்று பேசினார்.

    புவிசார் குறியீடு பெருவதற்கான விண்ணப்பம் நவம்பர் மாதம் செய்யப்பட்டது

    இதனைதொடர்ந்து, மணப்பாறை முறுக்கு, ஆத்தூர் வெற்றிலை, மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் பிரம்பு வேலைப்பாடு, மார்த்தாண்டம் தேன், கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன்சேலை, மயிலாடி கல்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார்குறியீடு பெற முன்னரே விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகள் இந்தப்பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டோம். அனைத்து ஆய்வுகளும் முடிந்தப்பின்னர் கடந்த நவம்பர் மாதம் இதற்காக விண்ணப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது எவ்வித எதிர்ப்பும் இல்லாத நிலையில் இந்த 11 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். இதன்மூலம் மொத்தம் 56 பொருட்களுக்கு புவிசார்குறியீடு பெற்ற முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    இந்தியா

    தமிழ்நாடு

    தமிழக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய செல்லூர் ராஜா இந்தியா
    ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் சுங்க கட்டண உயர்வு! வாகனம்
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை
    சென்னையில் மீண்டும் ஒரு பிரபலத்தின் வீட்டில் நகைகள் கொள்ளை கோலிவுட்

    இந்தியா

    ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்: பெங்களூரில் பரபரப்பு பெங்களூர்
    நெதர்லாந்து சுற்றுலாப் பயணியை துன்புறுத்தி கத்தியால் குத்திய ரிசார்ட் ஊழியர் கோவா
    பல டிஜிட்டல் நவீன வசதிகளுடன் வெளியான Odysse Vader மின்சார பைக்! எலக்ட்ரிக் வாகனங்கள்
    ஒரே வருடத்தில் 6 லட்சத்திற்கு இட்லி வாங்கி இருக்கும் ஹைதராபாத் ஆசாமி ஸ்விக்கி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023