NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம்
    இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம்

    இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம்

    எழுதியவர் Nivetha P
    Mar 31, 2023
    05:32 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் இன்று(மார்ச்.,31) ஒரே நாளில் மணப்பாறை முறுக்கு, ஆத்தூர் வெற்றிலை, மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் பிரம்பு வேலைப்பாடு, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞரான சஞ்சய்காந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தஞ்சையில் நிரூபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

    அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான சட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது.

    அதன்படி தமிழகத்தில் ஏற்கனவே தஞ்சாவூர் வீணை, பொம்மை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போன்ற 45 பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. என்று பேசினார்.

    மொத்தம் 56 பொருட்கள்

    புவிசார் குறியீடு பெருவதற்கான விண்ணப்பம் நவம்பர் மாதம் செய்யப்பட்டது

    இதனைதொடர்ந்து, மணப்பாறை முறுக்கு, ஆத்தூர் வெற்றிலை, மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் பிரம்பு வேலைப்பாடு, மார்த்தாண்டம் தேன், கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன்சேலை, மயிலாடி கல்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார்குறியீடு பெற முன்னரே விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது.

    பல ஆண்டுகள் இந்தப்பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டோம்.

    அனைத்து ஆய்வுகளும் முடிந்தப்பின்னர் கடந்த நவம்பர் மாதம் இதற்காக விண்ணப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது எவ்வித எதிர்ப்பும் இல்லாத நிலையில் இந்த 11 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

    இதன்மூலம் மொத்தம் 56 பொருட்களுக்கு புவிசார்குறியீடு பெற்ற முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி

    தமிழ்நாடு

    இந்தியாவின் கடைசி வாழும் சதிர் நடன கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள் பத்மஸ்ரீ விருது
    ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 யானைகள் பலி ஈரோடு
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில் சென்னை

    இந்தியா

    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு கர்நாடகா
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    இந்திய ஏற்றுமதியில் வளர்ச்சி - 25% கைப்பற்றிய ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம்
    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025