NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெள்ள நிவாரண தொகை ரூ.6,000 யார் யாருக்கு ? - தமிழக அரசு அரசாணை வெளியீடு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெள்ள நிவாரண தொகை ரூ.6,000 யார் யாருக்கு ? - தமிழக அரசு அரசாணை வெளியீடு 
    வெள்ள நிவாரண தொகை ரூ.6,000 யார் யாருக்கு ? - தமிழக அரசு அரசாணை வெளியீடு

    வெள்ள நிவாரண தொகை ரூ.6,000 யார் யாருக்கு ? - தமிழக அரசு அரசாணை வெளியீடு 

    எழுதியவர் Nivetha P
    Dec 13, 2023
    09:27 pm

    செய்தி முன்னோட்டம்

    மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தது.

    இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    இந்நிலையில், இந்த 4 மாவட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரணத்தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

    தற்போது இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதன்படி சென்னையிலுள்ள அனைத்து வட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, ஆவடி, பூவிருந்தவல்லி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட வட்டங்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும்.

    அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்பத்தூர் வட்டம் 3 வருவாய் கிராமங்களுக்கும், குன்றத்தூர் வட்டம் முழுவதும் நிவாரண தொகை வழங்கப்படும்.

    வுயல் 

    நாளை(டிச.,14) முதல் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது

    மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுவதுமாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கு மட்டும் இத்தொகை வழங்கப்படவுள்ளது.

    இந்த புயலால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு 2 நாட்கள் வெள்ளத்தில் சிக்கி பொருட்களை இழந்தவர்களுக்கு இந்த நிவாரணத்தொகை நியாயவிலை கடைகளில் டோக்கன் வழங்கப்பட்டு நிதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே, அரசு, சர்க்கரை அட்டைத்தாரர்கள், பொதுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டிருந்தால் வங்கிக்கணக்கு எண் விவரங்களோடு விண்ணப்பிக்கலாம் என்றும்,

    விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய நிவாரணம் வங்கிக்கணக்கில் நேரடியாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதற்கான விண்ணப்பங்கள் நியாயவிலை கடைகளில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன்கள் நாளை(டிச.,14) முதல் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெள்ளம்
    சென்னை
    தமிழக அரசு
    செங்கல்பட்டு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    வெள்ளம்

    கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் மீண்டும் கனமழை  டெல்லி
    தென் கொரியாவில், கனமழை, வெள்ளம்: 33 பேர் பலி தென் கொரியா
    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை  உத்தரகாண்ட்
    மீண்டும் உயர்ந்தது யமுனையின் நீர்மட்டம்: உஷார் நிலையில் டெல்லி டெல்லி

    சென்னை

    சென்னையில் வெள்ளத்தால் பாதித்த 200 குடும்பங்களுக்கு நேரில் நிதியுதவி அளித்த கேபிஒய் பாலா பாலா
    புழல் ஏரியின் தடுப்பு சுவர் சேதம்; கரை உடையும் அபாயம் கனமழை
    'வெள்ளம் வந்தாலும் மும்பை நீதிமன்றங்கள் செயல்படும்': சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சை கருத்து சென்னை உயர் நீதிமன்றம்
    புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவ கோரிய டேவிட் வார்னர்  டேவிட் வார்னர்

    தமிழக அரசு

    தீபாவளி பண்டிகை - வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும்  தீபாவளி
    இன்று முதல் அமலுக்கு வந்தது மின் கட்டண சலுகை - அரசாணை வெளியீடு சென்னை
    தீபாவளி பண்டிகை - 2 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதியளித்துள்ளது தமிழக அரசு  தீபாவளி
    சென்னையில் வாகனங்களுக்கான புது வேக கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது  சென்னை

    செங்கல்பட்டு

    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் - போராட்டத்தில் பயிற்சி மாணவர்கள்  போராட்டம்
    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்  போராட்டம்
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  மருத்துவக் கல்லூரி
    வேறொருவுடன் தொடர்பிலிருந்த கள்ளக்காதலியை தீயிட்டு கொளுத்திய வாலிபர் - க்ரைம் ஸ்டோரி  அரசு மருத்துவமனை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025