NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இங்கிலாந்து அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு; செங்கல்பட்டு அருகே புதிய தாவரவியல் பூங்கா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இங்கிலாந்து அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு; செங்கல்பட்டு அருகே புதிய தாவரவியல் பூங்கா 
    இங்கிலாந்து அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு-செங்கல்பட்டு அருகே புதிய தாவரவியல் பூங்கா

    இங்கிலாந்து அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு; செங்கல்பட்டு அருகே புதிய தாவரவியல் பூங்கா 

    எழுதியவர் Nivetha P
    Jul 28, 2023
    06:28 pm

    செய்தி முன்னோட்டம்

    தற்போதுள்ள சூழலில் நாளுக்குநாள் சுற்றுசூழல் பாதிப்படைந்து வரும் நிலையில், இயற்கையினை பாதுகாக்க மாநில அரசு, மத்திய அரசு மற்றும் தன்னார்வலர்கள் அவ்வப்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி தமிழ்நாடு அரசு, இங்கிலாந்து அரசுடன் இணைந்து சென்னை, செங்கல்பட்டு அருகே புதிய தாவரவியல் பூங்கா ஒன்றினை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    லண்டன் நாட்டில் உள்ள கியூ கார்டன்ஸ் நிறுவன தொழில்நுட்பத்தினை கொண்டு இந்த தாவரவியல் பூங்கா ஈரநிலங்கள், அலையாத்தி காடுகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடவேண்டியவை ஆகும்.

    பூங்கா 

    சுற்றுசூழல் மற்றும் காலநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் புதிய திட்டங்கள் துவக்கம் 

    தமிழகத்தின் பூர்வீக அரிய வகையினை சேர்ந்த தாவர இனங்களை பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த பூங்கா அமைப்பதன் முக்கிய நோக்கமாகும்.

    இந்நிலையில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன், இங்கிலாந்து நாட்டின் சுற்றுசூழல், உணவு மற்றும் ஊரக விவகாரங்கள் துறையின் அமைச்சர் தெரஸ் கோபே உள்ளிட்டோர் முன்னிலையில், தமிழக சுற்றுசூழல் காலநிலை மாற்றம்,&வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹு, கியூ கார்டன் இயக்குனரான ரிச்சர்ட் டேவேரெல் ஆகியோர் இடையே கையெழுத்தானது.

    சென்னையில் நடைபெறும் ஜி 20 சுற்றுசூழல் மற்றும் காலநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் இது போன்று பல முக்கிய திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாநில அரசு
    இங்கிலாந்து

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா

    இங்கிலாந்து

    மெகா சுனாமியால் அழியப்போகும் பேராபத்து? விஞ்ஞானிகள் எச்சரிக்கை! தொழில்நுட்பம்
    காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் இந்தியா
    பழிக்கு பழி: இங்கிலாந்து தூதரகத்தின் பாதுகாப்பை குறைத்த இந்தியா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025