NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டிக்கெட் விலை அதிகரிப்பு: ஆம்னி பேருந்து குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிக்கெட் விலை அதிகரிப்பு: ஆம்னி பேருந்து குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு
    தீபாவளி பண்டிகை - ஆம்னி பேருந்து குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

    டிக்கெட் விலை அதிகரிப்பு: ஆம்னி பேருந்து குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Nov 08, 2023
    01:33 pm

    செய்தி முன்னோட்டம்

    தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு போக்குவரத்து சேவைகளை அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    இந்நிலையில், ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, "செங்கல்பட்டு வழியே செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் நவம்பர் 9, 10, 11 தேதிகளில் கோயம்பேடு பகுதியிலிருந்து புறப்பட்டு நசரத்பேட்டை வழியே கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சென்று பயணிகளை ஏற்றி செல்லும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேதிகளில் காவல்துறை உத்தரவுப்படி, வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

    பேருந்துகள் 

    கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் மட்டுமே ஆம்னி பேருந்து நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்லும் 

    இதன் காரணமாக பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் நின்று ஆம்னி பேருந்துகளில் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், புதுச்சேரி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் இயங்கும் ஆம்னி பேருந்துகள், காவல்துறை அனுமதி பெற்று வழக்கம் போல் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே, ஆம்னி பேருந்துகளில் சங்கம் நிர்ணயித்த கட்டணத்தினை மிகாமல் பயணிகளிடம் வசூலிக்க வேண்டும் என்றும் பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விவரங்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆம்னி பேருந்துகள் குறித்த எந்தவொரு புகார்களையும் 9043379664 என்னும் தொலைபேசி எண்ணிற்கு பயணிகள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆம்னி பேருந்துகள்
    தீபாவளி
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ஆம்னி பேருந்துகள்

    வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் - விடுவிக்கப்படாத ஆம்னி பேருந்துகள்  ஆயுத பூஜை
    வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால் கடும் நடவடிக்கை தமிழ்நாடு

    தீபாவளி

    தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு  டெல்லி
    நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு விக்ரம்
    சிவகாசியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த பட்டாசு விபத்து - 13 பேர் பலி  விருதுநகர்
    ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு மத்திய அரசு

    காவல்துறை

    நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ கொலை
    சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்  சென்னை
    ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு - FIR வெளியானது சென்னை
    கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் 15 பேர் பலி கார்

    காவல்துறை

    மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்  மதுரை
    கடலூர்: கணவனை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல்துறை காவல்துறை
    நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி
    ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம்  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025