NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா? ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்த பள்ளிக் கல்வித்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா? ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்த பள்ளிக் கல்வித்துறை
    காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

    காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா? ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்த பள்ளிக் கல்வித்துறை

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 03, 2024
    03:49 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை காலாண்டு விடுமுறை குறித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு நடைபெற்றது.

    இந்த காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 27ஆம் தேதி நிறைவு பெற்ற நிலையில், அக்டோபர் 2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டு, அதன் பின்னர் பள்ளியைத் திறக்க திட்டமிடப்பட்டது.

    எனினும், ஆசியர்களின் கோரிக்கையை அடுத்து விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

    இந்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

    தனியார் பள்ளிகள்

    தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்

    பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்ட நிலையிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் சிறப்பு வகுப்புகளை வீட்டிலிருந்தே வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

    சமூக வலைதளங்களில் சில பள்ளிகள் இதற்கான அட்டவணையையே வெளியிட்டதாகக் கூறப்படும் நிலையில், இது மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்நிலையில், மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது என கடுமையாக அறிவுறுத்தியுள்ள பள்ளிக் கல்வித்துறை, உத்தரவை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு, காலாண்டு விடுமுறையை குதூகலமாக கொண்டாட திட்டமிட்ட மாணவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளிக்கல்வித்துறை
    பள்ளிகள்
    பள்ளி மாணவர்கள்
    பள்ளிகளுக்கு விடுமுறை

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்

    பள்ளிக்கல்வித்துறை

    டெட் பட்டதாரிகள் சங்கத்தினருடனான அன்பில் மகேஷின் பேச்சுவார்த்தை தோல்வி  தேர்வு
    முதன்முறையாக 'தலைமை ஆசிரியர் வழிகாட்டி கையேடு' புத்தகத்தை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை  பள்ளி மாணவர்கள்
    மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை பிரியாணி வழங்க திட்டம் மகாராஷ்டிரா
    கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்

    பள்ளிகள்

    தெலுங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிப்படைந்த 8 லட்சம் குழந்தைகள் தெலுங்கானா
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தேதிகள் மாற்றம்  தமிழகம்
    அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு

    பள்ளி மாணவர்கள்

    தமிழகத்தில் 64.22 லட்சம் பேர் அரசு பணிக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தகவல்  தமிழ்நாடு
    அரசு பொது தேர்வு அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும்:  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை
    தமிழ்நாட்டின் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது பள்ளிக்கல்வித்துறை
    தமிழகத்தில் 6-12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை

    பள்ளிகளுக்கு விடுமுறை

    திருச்செந்தூர் அருகே பரிதாபம் - திடீர் வெடிச்சத்தம் கேட்டு 10 வயது பள்ளி மாணவன் பலி திருச்செந்தூர்
    புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் புதுச்சேரி
    மாணவர்களுக்கு நற்செய்தி! 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!  புதுச்சேரி
    ஜூன் 12 ஆம் தேதிக்கு பள்ளிகளின் திறப்பு ஒத்திவைப்பு!  பள்ளி மாணவர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025