NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாடு-தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதாரை இணைப்பதில் சிக்கல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாடு-தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதாரை இணைப்பதில் சிக்கல்
    தமிழ்நாடு-தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதாரை இணைப்பதில் சிக்கல்

    தமிழ்நாடு-தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதாரை இணைப்பதில் சிக்கல்

    எழுதியவர் Nivetha P
    Feb 10, 2023
    12:10 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ம்தேதி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

    அதன்படி, நவம்பர் 15ம்தேதி முதல் 2,811 மின்பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இதற்கான பணியை மின் வாரியம் துவங்கியது.

    இதற்கான கால அவகாசத்தை பிப்ரவரி 15ம்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி 2.67கோடி மின் இணைப்பில் தற்போது வரை 90.69சதவிகிதம் இணைக்கப்பட்டுள்ள நிலையில், மீதம் 9.31சதவீதம் பேர் இணைக்கவேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

    இதனிடையே இந்த ஆதார் எண் இணைப்பிற்காக வழங்கிய https://nsc.tnebltd.gov.in/adharupload/என்னும் இணையத்தளத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாகவும், ஆதாரை இணைத்த பின்னரும் இணைக்கவில்லை என்ற தவறான தகவல் வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    மின் நுகர்வோர் புகார்

    பல குழப்பங்கள் இடையில் அமைச்சரின் அறிவிப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார்

    இந்நிலையில், பலரும் இணைக்காத நிலையில் அமைச்சரின் மேற்கூறப்பட்ட அறிவிப்பு மின்நுகர்வோர் இடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பல குழப்பங்கள் நீடிக்கும் நிலையில், இணைத்த பின்னரும் இணைக்கவில்லை என வரும் குறுந்தகவல் குறித்து கேட்டால் மின் அலுவலகத்திற்கு நேரில்வந்து பதிவுசெய்தால் பிரச்சனை இருக்காது என்று கூறுகிறார்கள்.

    ஆனால் முகாம்களுக்கு சென்று இணைத்தோருக்கும் இதே தகவல்தான் வருகிறது என்று மின் நுகர்வோர் கூறுகிறார்கள்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரி கூறுகையில், சர்வர் பழுதாகியிருக்கும்போது இணைப்பு செய்தால் இணைத்துவிட்டதாக கூறப்படும், சர்வர் சரியான பின்னர் இணைக்கவில்லை என்று தகவல் வந்திருக்கும்.

    இந்தப்பிரச்சனை தொடர்ந்துகொண்டு தான் உள்ளது என்று கூறினார்.

    எனினும் தற்போது எளிதாக பதிவுசெய்ய முடிகிறது. இணைப்பு செய்யாதோர் வீடுகளுக்கு சென்று ஊழியர்கள் இணைத்து வருகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ஆதார் புதுப்பிப்பு

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    தமிழ்நாடு

    முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்: மாநிலம் முழுவதும் களப்பணி செய்யப்போவதாக அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    18+ திரைப்படங்களை சிறுவர்கள் காண அனுமதிப்பதை தடுக்க கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றம்
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை
    பொங்கல் பரிசு - தமிழகத்தில் 4 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல் பொங்கல் பரிசு

    ஆதார் புதுப்பிப்பு

    50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதாரில் முகவரி மாற்றலாம் - புது வசதி அறிமுகம் இந்தியா
    பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம் தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025