NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பருவமழை, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பருவமழை, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
    தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.

    பருவமழை, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

    எழுதியவர் Srinath r
    Dec 01, 2023
    02:46 pm

    செய்தி முன்னோட்டம்

    வடகிழக்கு பருவமழை, வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், வருவாய்துறை அமைச்சர், டிஜிபி, தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஆட்சியர்கள் காணொளி வாயிலாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    நான்காம் தேதி கரையை கடக்கும் புயல்

    தென்கிழக்கு வங்க கடல் பகுதியில், நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    இது தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர் இது 3 ஆம் தேதி புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இப்புயல், தெற்கு ஆந்திரா, வட தமிழக கடலோர பகுதிகளில், 4 ஆம் தேதி மாலை சென்னை மற்றும் மசூலிபட்டணத்திற்கு இடையில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் கரையை கடக்கும் போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வரை காற்று வீசலாம் என, தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    3rd card

    இயல்பை விட 6% குறைவாக பெய்த வடகிழக்கு பருவமழை

    கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரை, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில், 34 சென்டிமீட்டர் மழை வடகிழக்கு பருவமழை பொழிந்துள்ளது.

    இந்த காலத்தில், இயல்பான மழை பொழிவான 36 சென்டிமீட்டரை விட, இது 6% குறைவு.

    மேலும் புயல் கரையை கடக்கும் போது திருவள்ளூர் மாவட்டத்தில், அதிக கன மழை இருக்கக் கூடும் எனவும், சென்னையில் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வங்க கடல்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    வானிலை அறிக்கை

    அக்டோபர் 11ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    16 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    15 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    13 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு

    வானிலை எச்சரிக்கை

    3 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    14 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    11 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    அக்டோபர் 17ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு

    வானிலை எச்சரிக்கை

    18 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை  தமிழ்நாடு
    11 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை தமிழ்நாடு
    தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை: தேஜ் புயல் வலுப்பெற்றது: இன்றைய வானிலை நிலவரம்  தமிழகம்
    அரபிக்கடலில் 'தேஜ்', வங்காள விரிகுடாவில் 'ஹமூன்': இரட்டை புயல்களை எதிர்கொள்ள இருக்கும் இந்தியா வானிலை எச்சரிக்கை

    வங்க கடல்

    வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும் கனமழை
    வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை! காற்றழுத்த தாழ்வு நிலை
    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு நிலை
    வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025