NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இபிஎஸ்'க்கு எதிரான முறைகேடு வழக்கு - தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இபிஎஸ்'க்கு எதிரான முறைகேடு வழக்கு - தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
    இபிஎஸ்'க்கு எதிரான முறைகேடு வழக்கு - தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

    இபிஎஸ்'க்கு எதிரான முறைகேடு வழக்கு - தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

    எழுதியவர் Nivetha P
    Sep 11, 2023
    02:48 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்துகொண்டிருந்த பொழுது நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை எடப்பாடி கே பழனிசாமி தனது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு கொடுத்ததில் ரூ.4,800 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

    இதுகுறித்து லஞ்சஒழிப்புத்துறையிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    அதனால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

    அதன்படி இந்த வழக்கினை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அப்போது இதுகுறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், மீண்டும் இவ்வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கவேண்டும் எனக்கூறி உத்தரவிட்டது.

    வழக்கு 

    கடந்த ஜூலை 18ம் தேதி வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் 

    இதன் காரணமாக மீண்டும் இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அமர்வில் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை முடிவில், 2018ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கையை அடிப்படையாக கொண்டே விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

    ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரிக்க தேவையில்லை என்று கூறி வழக்கினை கடந்த ஜூலை 18ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கினை தள்ளுபடி செய்தார்.

    இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், இந்த வழக்கு குறித்த விசாரணையினை தொடர அனுமதி வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எடப்பாடி கே பழனிசாமி
    அதிமுக
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    எடப்பாடி கே பழனிசாமி

    ஈரோடு இடைத்தேர்தல்-டி.சி.கிருஷ்ணனுன்னி முன்னிலையில் பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்கள் பறிமுதல் ஈரோடு
    பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: இபிஎஸுக்கு எதிராக வழக்கு தமிழ்நாடு
    இ.பி.எஸ்'க்கு எதிராக வழக்கு தொடுத்தவருக்கு ரூ.50,000 அபராதம்-சென்னை உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி 6 பொதுக்கூட்டங்கள் - இ.பி.எஸ். அறிவிப்பு ஜெயலலிதா

    அதிமுக

    இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு விவகாரம் - அமித்ஷா பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்  அமித்ஷா
    டாஸ்மாக் வருமானத்தை நம்பி அரசு இயங்கவில்லை - செந்தில் பாலாஜி  தமிழக அரசு
    டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ் - இருவரும் இணைந்து செயல்படுவதாக அறிவிப்பு  ஓ.பன்னீர் செல்வம்
    தினகரன் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி கருத்து  எடப்பாடி கே பழனிசாமி

    உச்ச நீதிமன்றம்

    அமலாக்கத்துறை தலைவரின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அமலாக்க இயக்குநரகம்
    செந்தில் பாலாஜி வழக்கு - புலன் விசாரணை குறித்து வாதம் செய்யும் அமலாக்கத்துறை  கைது
    அரசியலமைப்பின் 370வது பிரிவு: ஜம்மு காஷ்மீருக்கு என்ன நடந்தது? ஜம்மு காஷ்மீர்
    செந்தில் பாலாஜி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025