
'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் - தமிழக அரசு எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' என்னும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் முறையாக பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்தது.
இது குறித்து தமிழக அரசு ஓர் எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலம் இந்தியாவின் எந்தவொரு மாநிலத்தை சேர்ந்தவரும் எந்தவொரு நியாயவிலை கடையிலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசு அறிவித்த இந்த திட்டத்தின் மூலம் தங்களது சொந்த மாநிலத்தினை விட்டு பிற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
குடும்ப அட்டை
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கை
ஆனால் இந்த ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் பொருட்கள் தமிழ்நாட்டில் முறையாக வழங்கப்படுவதில்லை என்று அண்மையில் புகார்கள் எழுந்துள்ளது.
இதனையடுத்து அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில் எச்சரிக்கை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் தகுதி உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழ்நாட்டில் பொருட்கள் மறுக்கப்படாமல் வழங்கப்பட வேண்டும் எனவும்,
அதனை மீறும் ஊழியா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.