NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம்
    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம்
    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம்

    எழுதியவர் Sayee Priyadarshini
    Dec 07, 2022
    02:47 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் திருக்கார்த்திகை!

    வீடுகளை விளக்குகளால் அலங்கரித்து, மாக்கோலமிட்டு, கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படும். அதே நேரத்தில், மகா தீபம் என்று திருவண்ணாமலையில் பத்து நாட்கள் உற்சவம் முடிந்து இன்று, டிசம்பர் 6 மாலை மலை மேல் ஏற்றப்படும்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்றினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு ஆலய தரிசனம், மலையேற்றம் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கவில்லை.

    பக்தர்களின் பாதுகாப்புக்கு, நூற்றுகணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

    மேலும், முறையாக பதிவு செய்தவர்கள் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மகா தீபம்

    பரணி தீபமும் மகா தீபமும்

    ஈசனே அக்னி அம்சமாக அமர்ந்து அருள்பாலிக்கும் திருவண்ணாமலையில், லட்சகணக்கான பக்தர்கள் அணிவகுத்து வருகின்றனர்.

    கார்த்திகை தீப கொண்டாட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும், மகா தீபத்தை நேரில் தரிசிக்க, நேற்று முதலே பக்தர்கள் அணிவகுப்பு நடைபற்று வருகிறது.

    டிசம்பர் 6 ஆம் தேதி, திரு அண்ணாமலையார் திருக்கோவிலில், காலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்ற, நேற்றே மகா தீபக் கொப்பரை மற்றும் 4500 லிட்டர் நெய் ஆகியவை பக்தர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது

    இந்த நாளில் அகல் விளக்குகளில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி, வீடு முழுவதும் ஜகஜ்ஜோதியாக தெரியும் வகையில், காணும் இடமெல்லாம் ஜோதி சொரூபத்தில், நெகிழ்ச்சியாக இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025