NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம்
    இந்தியா

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம்

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம்
    எழுதியவர் Sayee Priyadarshini
    Dec 07, 2022, 02:47 pm 0 நிமிட வாசிப்பு
    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம்
    திருவண்ணாமலை

    நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் திருக்கார்த்திகை! வீடுகளை விளக்குகளால் அலங்கரித்து, மாக்கோலமிட்டு, கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படும். அதே நேரத்தில், மகா தீபம் என்று திருவண்ணாமலையில் பத்து நாட்கள் உற்சவம் முடிந்து இன்று, டிசம்பர் 6 மாலை மலை மேல் ஏற்றப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்றினால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு ஆலய தரிசனம், மலையேற்றம் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கவில்லை. பக்தர்களின் பாதுகாப்புக்கு, நூற்றுகணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள். மேலும், முறையாக பதிவு செய்தவர்கள் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பரணி தீபமும் மகா தீபமும்

    ஈசனே அக்னி அம்சமாக அமர்ந்து அருள்பாலிக்கும் திருவண்ணாமலையில், லட்சகணக்கான பக்தர்கள் அணிவகுத்து வருகின்றனர். கார்த்திகை தீப கொண்டாட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும், மகா தீபத்தை நேரில் தரிசிக்க, நேற்று முதலே பக்தர்கள் அணிவகுப்பு நடைபற்று வருகிறது. டிசம்பர் 6 ஆம் தேதி, திரு அண்ணாமலையார் திருக்கோவிலில், காலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்ற, நேற்றே மகா தீபக் கொப்பரை மற்றும் 4500 லிட்டர் நெய் ஆகியவை பக்தர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது இந்த நாளில் அகல் விளக்குகளில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி, வீடு முழுவதும் ஜகஜ்ஜோதியாக தெரியும் வகையில், காணும் இடமெல்லாம் ஜோதி சொரூபத்தில், நெகிழ்ச்சியாக இருக்கும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    பர்வதமலை
    திருவண்ணாமலை

    சமீபத்திய

    உலக சிறுநீரக தினம் 2023: ஆரோக்கியமான சிறுநீரகம், உடல் இயக்கத்திற்கு மிக முக்கியம் ஆரோக்கியம்
    INDvsAUS நான்காவது டெஸ்ட் : டாஸ் வென்றது ஆஸ்திரேலியா! முதலில் பேட்டிங் செய்ய முடிவு! டெஸ்ட் கிரிக்கெட்
    பெண்களுக்காக உருவாக்கப்பட்ட டெக் சாம்ராஜ்யம்: ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள வணிகத்தை உருவாக்கிய பெண் சர்வதேச பெண்கள் தினம்
    பெண்களின் கதைகளை டாட்டூவாக வரையும் சீன கலைஞர் சீனா

    பர்வதமலை

    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு திருவண்ணாமலை

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - மேலும் 2 கொள்ளையர்கள் கைது தமிழ்நாடு
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்களை பிடிப்பதில் காவல்துறையினருக்கு திடீர் சிக்கல் காவல்துறை
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல் மாவட்ட செய்திகள்
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை காவல்துறை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023