NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திகழும் திருப்பூர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திகழும் திருப்பூர்
    இந்தியாவின் 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திகழும் திருப்பூர்

    இந்தியாவின் 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திகழும் திருப்பூர்

    எழுதியவர் Nivetha P
    Apr 05, 2023
    03:33 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் உள்ள 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திருப்பூர் தற்போது மாறியுள்ளது.

    'வந்தாரை வாழவைக்கும் திருப்பூர்' என சொல்லும் அளவுக்கு திருப்பூர் உள்நாடு-வெளிநாடு ஏற்றுமதி என ஆண்டுக்கு ரூ.60ஆயிரம் கோடி வர்த்தகம் செய்கிறது.

    திருப்பூரின் இந்த வளர்ச்சியினை நாடு முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும் என்று பல இடங்களில் மத்தியவர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் பல இடங்களில் தெரிவித்துள்ளார்.

    அதன்படி இந்தியாவில் 75 இடங்களில் திருப்பூரை உருவாக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக உள்ளது.

    இந்நிலையில் தான் தற்போது இந்த 'மெகா பார்க்' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 7 இடங்களிலும் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்திலும் இந்த ஜவுளிப்பூங்கா அமையவுள்ளது.

    தற்போதைய காலகட்டத்தில் உலகளவில் 34%ஆடைத்தேவையினை நிவர்த்தி செய்வது சீனா மட்டுமே.

    மெகா பார்க் திட்டம்

    அடுத்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்த ஜவுளித்துறையும் முன்னேற்றம் காணும்

    சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தோனேஷியா,கம்போடியா,பாகிஸ்தான்,வியட்நாம் போன்ற நாடுகள் நமக்கு போட்டியாகவுள்ளது.

    இதில் இந்தியாவின் பங்களிப்பு வெறும் 4%என்பதும் குறிப்பிடவேண்டியவை.

    கொரோனா காலத்திற்கு பின்னர் சீனாவுடன் தொடர்பிலிருந்த வர்த்தக நாடுகள் தங்கள் உற்பத்தி கேந்திரங்களை இந்தியாவில் நிறுவுவதற்கான சாத்தியங்களையும், ஏற்கனவே நம்மோடு சிறிதளவில் வர்த்தகம் செய்வோர் தங்கள் வர்த்தகத்தை அதிகரிக்கவும் முடிவுசெய்துள்ளது முக்கிய அம்சமாக தற்போது பார்க்கப்படுகிறது.

    இதற்கு ஆயத்தமாக இந்த ஜவுளிப்பூங்கா அறிவிப்பு பேருதவியாக இருக்கும்.

    இந்நிலையில் கடந்தவாரம் திருப்பூரில் நடந்த சர்வதேச பின்னலாடை வர்த்தகக்கண்காட்சியின் அடிப்படை காரணம் செயற்கைநூலிழை ஆடையினை உற்பத்தி செய்வதாகவே இருந்தது.

    இந்த மெகா பார்க் திட்டம் அமலுக்கு வந்த பின்னர் ஒட்டுமொத்த ஜவுளித்துறையும், சர்வதேச ஆயத்த ஆடை உற்பத்தி துறையும் அடுத்த 5ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பூர்
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    திருப்பூர்

    திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன் தமிழ்நாடு
    திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது காவல்துறை
    திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை சமூக வலைத்தளம்
    வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை தமிழ்நாடு

    தமிழ்நாடு

    அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல் மாவட்ட செய்திகள்
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    ரோஹிணி தியேட்டர் விவகாரம்: இன்றும் தொடர்கிறதா தீண்டாமை கொடுமை?தியேட்டர் உரிமையாளர்கள் அளித்த விளக்கம் திரைப்பட வெளியீடு
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது காவல்துறை

    இந்தியா

    எகிறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 24 மணிநேரத்தில் 2,994 புதிய தொற்றுகள் பதிவு கொரோனா
    விமான பிரீமியம் எகானமி - வாடிக்கையாளர்களுக்கு ஏர் இந்தியா அசத்தல் அறிவிப்பு! ஏர் இந்தியா
    மேல தாளம் முழங்க, காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை வரவேற்க தயாராகும் தொண்டர்கள் பஞ்சாப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025