NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இரண்டு அடுக்கு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டு வரும் திருப்பதி நகராட்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இரண்டு அடுக்கு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டு வரும் திருப்பதி நகராட்சி
    இரண்டு அடுக்கு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டு வரும் திருப்பதி நகராட்சி

    இரண்டு அடுக்கு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டு வரும் திருப்பதி நகராட்சி

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 12, 2023
    01:31 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹைதராபாத்திற்கு அடுத்தபடியாக இரண்டு அடுக்கு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டிருக்கிறது திருப்பதி நகராட்சி. இந்தியாவின் மிக முக்கியமான திருத்தலங்களுள் ஒன்றாக விளங்கும் திருப்பதிக்கு தினமும் 1 லட்சம் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    திருப்பதிக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கும், திருப்பதி நகரவாசிகளின் பயன்பாட்டிற்கும் இரண்டு அடுக்க எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது திருப்பதி நகராட்சி.

    முன்னதாக, திருப்பதியில் சுலபமான போக்குவரத்திற்கு வழி செய்யும் வகையில் 20 புதிய சாலைகள் கட்டமைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது அந்நகராட்சி.

    இந்த புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டால், ஆந்திராவிலேயே முதலில் இரண்டு அடுக்கு பேருந்துகளை அறிமுகப்படுத்திய முதல் நகராட்சி என்ற பெயரை திருப்பதி நகராட்சி பெறும்.

    திருப்பதி

    எப்போது அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது? 

    திருப்பதியை நோக்கி பல்வேறு நகரங்களிலிருந்து பல்வேறு வழித்தடங்களில் வரும் பக்தர்கள் எளிதாக திருமலா திருப்பதியை அடைவதற்கு வழி செய்யும் வகையில் சமீபத்தில் தான் ஸ்ரீனிவாச சேது விரைவுச் சாலையை திறந்து வைத்தார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

    இந்த விரைவுச் சாலையையும் திருப்பதி நகரகராட்சியின் ஆதரவு பெற்ற திருப்பதி ஸ்மார்ட் சிட்டி கார்ப்பரேஷனே கட்டமைத்தது.

    மேற்கூறிய வகையில் திருப்பதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு அடுக்கு எலெக்ட்ரிக் பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.

    இந்த திட்டத்தின் முதற்கட்டமாக, இந்த அக்டோபர் மாத இறுதிக்குள் முதல் இரண்டு அடுக்கு எலெக்ட்ரிக் பேருந்தை திருப்பதி சாலைகளில் இயக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி
    ஆந்திரா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா

    ஆந்திரா

    பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இந்தியா
    திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடியில் 10 பஸ்கள் நன்கொடை திருப்பதி
    திருப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திவ்ய தரிசனம் மீண்டும் துவக்கம் திருப்பதி
    முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் ரெட்டி பாஜகவில் இணைந்தார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025