NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை ஆணையத்தில் மேலும் 2 புகார் மனு விசாரணைக்கு ஏற்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை ஆணையத்தில் மேலும் 2 புகார் மனு விசாரணைக்கு ஏற்பு
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை ஆணையத்தில் மேலும் 2 புகார் மனு விசாரணைக்கு ஏற்பு

    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை ஆணையத்தில் மேலும் 2 புகார் மனு விசாரணைக்கு ஏற்பு

    எழுதியவர் Nivetha P
    Apr 07, 2023
    01:34 pm

    செய்தி முன்னோட்டம்

    திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.

    இவர் காவல் நிலையத்திற்கு சிறிய குற்றங்களுக்காக விசாரணைக்கு அழைத்து வருவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வருகிறார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து பல்வீர் சிங் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, இதில் சம்பந்தப்பட்ட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு தலைமை காவலர் போகபூமன், கல்லிடைக்குறிச்சி தலைமை காவலர் ராஜ்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

    மாவட்ட உளவுத்துறை இன்ஸ்பெக்டர் கோமதி சென்னை தலைமையிடத்திற்கும், அம்பை சரக உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் காவல்நிலைய பணிக்கும் மாற்றப்பட்டனர்.

    2 புகார் மனுக்கள்

    சித்திரவதை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு

    இதனைதொடர்ந்து மீண்டும் நேற்று முன்தினம் 6 காவல்துறை அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

    இந்நிலையில், கடந்த 30ம்தேதி கொல்கத்தாவை சேர்ந்த ஆசிஸ் என்னும் வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட செல்லப்பா உள்ளிட்டோர் குறித்து தேசிய மனிதஉரிமை ஆணையத்தில் மனு அளித்தார்.

    அந்த மனு நிலுவையில் உள்ளது.

    இதனையடுத்து தற்போது வி.கே.புரம் வேதநாராயணன் என்பவரது பல் பிடுங்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையை சேர்ந்த ரவி சந்தோஷ் என்பவர் தேசிய மனிதஉரிமை ஆணையத்தில் மேலும் ஒரு புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இவரைதொடர்ந்து, இந்த விவகாரத்தில் நடந்த சித்திரவதை குறித்து ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவரும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த 2 மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருநெல்வேலி
    மனித உரிமைகள் ஆணையம்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக

    திருநெல்வேலி

    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை மாவட்ட செய்திகள்
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு தமிழ்நாடு
    வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை உள்ளூர் செய்தி

    மனித உரிமைகள் ஆணையம்

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - விரிவான அறிக்கையளிக்க 6 வார கால அவகாசம் விழுப்புரம்
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம் திருநெல்வேலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025