NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம்
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம்

    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம்

    எழுதியவர் Nivetha P
    Apr 06, 2023
    01:53 pm

    செய்தி முன்னோட்டம்

    திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.

    இவர் காவல் நிலையத்திற்கு சிறிய குற்றங்களுக்காக விசாரணைக்கு அழைத்து வருவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்துவருகிறார் என்று புகார்கள் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து பல்வீர்சிங் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    இதுகுறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சப் கலெக்டர் முகமது சபீர் ஆலம் கல்லிடைக்குறிச்சி வி.கே.புரம் அம்பை காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

    அப்போது சிசிடிவி பதிவுகளை கேட்ட நிலையில், 10,11,12 தேதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிசிடிவி காட்சிகள் பதிவாகவில்லை.

    இதனை தொடர்ந்து தற்போது சம்பவத்தன்று சிசிடிவி காட்சிகள் ஏன் பதிவாகவில்லை என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.

    அதிரடி நடவடிக்கை

    மனித உரிமை ஆணையமும் இது தொடர்பாக விசாரணை

    மேலும் இந்த விவகாரம் குறித்து மாநில மனித உரிமை ஆணையமும் இதுகுறித்து தனியாக விசாரணையினை செய்து வருகிறது.

    இதனை தொடர்ந்து, இதில் சம்பந்தப்பட்ட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு தலைமை காவலர் போகபூமன், கல்லிடைக்குறிச்சி தலைமை காவலர் ராஜ்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

    மாவட்ட உளவுத்துறை இன்ஸ்பெக்டர் கோமதி சென்னை தலைமையிடத்திற்கும், அம்பை சரக உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் காவல்நிலைய பணிக்கும் மாற்றப்பட்டனர்.

    தொடர்ந்து நேற்று(ஏப்ரல்.,5) மீண்டும் காவல் ஆய்வாளர்கள் எஸ்.சந்திரமோகன், பி.ராஜகுமாரி, எ.பெருமாள், அம்பை கோட்ட சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன், தலைமை காவலர் எம்.சந்தானகுமார், காவலர் வி.மணிகண்டன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருநெல்வேலி
    காவல்துறை
    காவல்துறை
    மனித உரிமைகள் ஆணையம்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    திருநெல்வேலி

    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை மாவட்ட செய்திகள்
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு தமிழ்நாடு
    வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை உள்ளூர் செய்தி

    காவல்துறை

    ஆந்திராவில் இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை ஆந்திரா
    கர்நாடகாவில் மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர் கர்நாடகா
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் கைது - மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மறுப்பு திருவண்ணாமலை

    காவல்துறை

    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் தமிழ்நாடு
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை திருவண்ணாமலை
    புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை புதுச்சேரி
    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடையில்லை மதுரை

    மனித உரிமைகள் ஆணையம்

    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - விரிவான அறிக்கையளிக்க 6 வார கால அவகாசம் விழுப்புரம்
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025