NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சுற்றித்திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையினை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுற்றித்திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையினை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை 
    சுற்றித்திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையினை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

    சுற்றித்திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையினை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை 

    எழுதியவர் Nivetha P
    May 16, 2023
    05:39 pm

    செய்தி முன்னோட்டம்

    தேனி மாவட்டம் மேகமலையில் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானையினை மயக்க ஊசி போட்டு பிடிக்குமாறு வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள சின்னக்கானலில் அரிக்கொம்பன் என்னும் காட்டு யானை சுற்றித்திரிந்தது.

    இதனை அப்பகுதி வனத்துறையினர் கடும் முயற்சி மேற்கொண்டு மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.

    பின்னர் அதனை தேக்கடி பெரியார் புலிகள் சரணாலயத்தில் ஒப்படைத்தனர்.

    கடந்த சில வாரத்திற்கு பிறகு அங்கிருந்து வெளியேறிய இந்த அரிக்கொம்பன் காட்டு யானை இரவங்கலாறு மற்றும் பத்துக்கோடு பகுதிக்குள் புகுந்தது என்று கூறப்படுகிறது.

    யானை 

    உயிருக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே தஞ்சமடைந்துள்ள பொதுமக்கள் 

    இதனை தொடர்ந்து, சின்னமன்னூர் வனத்துறையினர் ரேடியோ காலர் சிக்னல் மூலம் யானையின் நடமாட்டத்தினை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    அதன்படி பத்துக்கோடு பகுதியில் சுற்றித்திரியும் யானை ரேஷன் கடை மற்றும் வீடுகளை உடைத்து அதனுள் வைக்கப்பட்டுள்ள அரிசியினை தின்று வருகிறது என்று தெரியவந்தது.

    யானையின் இந்த அசாதாரண நடமாட்டத்தால் அங்கு வசிக்கும் பொது மக்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று பயத்தில் வீட்டின் உள்ளேயே தஞ்சம் அடைந்துள்ளார்கள்.

    ரேஷன் கடை பணியாளர்களும் பயத்தால் பணிக்கு வருவது இல்லை என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இத்தகைய சூழலில் அப்பகுதி மக்கள் அந்த அரிக்கொம்பன் யானையினை மயக்க ஊசி போட்டு பிடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேனி
    கேரளா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    தேனி

    தேனி மாவட்ட குரங்கணி காட்டு தீ விபத்து ஏற்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு - தேனி மக்கள் வேதனை மாவட்ட செய்திகள்
    கேரளாவில் 100க்கு 97மதிப்பெண்கள் எடுத்த 108 வயதுடைய மூதாட்டி தமிழ்நாடு
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    திரைப்படமாக தயாராகும் 'அரிசி கொம்பன்' ஆண் யானையின் கதை - பர்ஸ்ட் லுக் போஸ்டர்  திரைப்பட துவக்கம்

    கேரளா

    கேரளாவில் ஆண்கள் பெண்களாக மாறி கொண்டாடும் கொட்டாங்குளங்கர சமயவிளக்கு திருவிழா கோவில் திருவிழாக்கள்
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் விமானம்
    கேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா
    கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025