NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி
    அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி
    இந்தியா

    அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி

    எழுதியவர் Sindhuja SM
    April 14, 2023 | 04:44 pm 1 நிமிட வாசிப்பு
    அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி
    சோனியா காந்தி, பி.ஆர் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று 'தி டெலிகிராப்' பத்திரிகையில் தன் கட்டுரையை வெளியிட்டிருந்தார்.

    மதம், மொழி, சாதி மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை பிரிக்க தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் தான் உண்மையான தேசவிரோதிகள் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று(ஏப் 14) கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அறிஞரும் சீர்திருத்தவாதியுமான பி.ஆர் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று 'தி டெலிகிராப்' பத்திரிகையில் தன் கட்டுரையை வெளியிட்டிருந்தார். 'அரசியல் சாசனத்தின் வெற்றி, ஆட்சி செய்பவரின் நடத்தையை பொறுத்தது' என்று அம்பேத்கர் கூறிய வாசகத்தை நினைவு கூர்ந்த சோனியா காந்தி, அம்பேத்கரின் எச்சரிக்கையை நாடு நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார். மத்திய அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதுடன் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றின் அடித்தளத்தை பலவீனப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.

    சோனியா காந்தி இந்த கட்டுரையில் கூறி இருக்கும் கருத்துக்களின் சுருக்கம்

    உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மக்களை துன்புறுத்துவதற்காக சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் சுதந்திரம் அச்சுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் தெரிந்தவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதால் சமத்துவம் பாதிக்கப்படுவதுடன், இதனால், பெரும்பான்மையான இந்தியர்கள் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். வேண்டுமென்றே வெறுப்பை பரப்பி இந்தியர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதால் சகோதரத்துவம் சிதைக்கப்படுகிறது. பிரச்சாரங்களின் மூலம் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதனால் அநீதி பெருகுகிறது. அனைத்து இந்தியர்களும், அவர்கள் எந்த குழுவை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த இக்கட்டான நேரத்தில் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். இந்த சகோதரத்துவ உணர்வை நாம் எப்போதும் வளர்த்து கொள்ள வேண்டும். நமது வீடுகளையும், சமூகங்களையும், அமைப்புகளையும் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    சோனியா காந்தி
    காங்கிரஸ்
    பாஜக

    இந்தியா

    இனி 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யலாம் - வெளியான புதிய அம்சம்!  ட்விட்டர்
    14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி  அசாம்
    சீனாவுக்கு பதிலடி: இந்திய-சீன எல்லையில் சுற்றுலா தலங்களை அமைக்க இந்தியா முடிவு  சீனா
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  சைபர் கிரைம்

    சோனியா காந்தி

    சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி இந்தியா
    சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக இந்தியா
    கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா - காங்கிரஸ் தலைமை முடிவு கர்நாடகா
    ராஜிவ் காந்தி நினைவு தினம்: உணர்ச்சிப்பூர்வமாக அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி  இந்தியா

    காங்கிரஸ்

    ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 20ம் தேதி வெளியாகும்  ராகுல் காந்தி
    'பாஜகவால் என்னை தடுக்க முடியாது': தனது முன்னாள் தொகுதியில் ராகுல் காந்தி  இந்தியா
    எம்பி பதவியை ராஜினாமா செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லூயிசின்ஹோ ஃபலேரோ இந்தியா
    காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இந்தியா

    பாஜக

    திமுக தலைவர்களின் சொத்து மதிப்பை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை  திமுக
    திமுக கட்சியின் ஊழல் பட்டியல் நாளை காலை வெளியீடு - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  திமுக
    கட்சியில் இருந்து விலகினார் கர்நாடக பாஜகவைச் சேர்ந்த லட்சுமண் சவாதி இந்தியா
    சென்னை ஆருத்ரா விவகாரம் - பாஜக நிர்வாகிகள் ஆஜராக சம்மன்  சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023