NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி
    சோனியா காந்தி, பி.ஆர் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று 'தி டெலிகிராப்' பத்திரிகையில் தன் கட்டுரையை வெளியிட்டிருந்தார்.

    அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி

    எழுதியவர் Sindhuja SM
    Apr 14, 2023
    04:44 pm

    செய்தி முன்னோட்டம்

    மதம், மொழி, சாதி மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களை பிரிக்க தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் தான் உண்மையான தேசவிரோதிகள் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று(ஏப் 14) கூறியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அறிஞரும் சீர்திருத்தவாதியுமான பி.ஆர் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று 'தி டெலிகிராப்' பத்திரிகையில் தன் கட்டுரையை வெளியிட்டிருந்தார்.

    'அரசியல் சாசனத்தின் வெற்றி, ஆட்சி செய்பவரின் நடத்தையை பொறுத்தது' என்று அம்பேத்கர் கூறிய வாசகத்தை நினைவு கூர்ந்த சோனியா காந்தி, அம்பேத்கரின் எச்சரிக்கையை நாடு நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    மத்திய அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதுடன் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றின் அடித்தளத்தை பலவீனப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.

    details

    சோனியா காந்தி இந்த கட்டுரையில் கூறி இருக்கும் கருத்துக்களின் சுருக்கம்

    உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மக்களை துன்புறுத்துவதற்காக சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் சுதந்திரம் அச்சுறுத்தப்படுகிறது.

    ஒவ்வொரு துறையிலும் தெரிந்தவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதால் சமத்துவம் பாதிக்கப்படுவதுடன், இதனால், பெரும்பான்மையான இந்தியர்கள் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

    வேண்டுமென்றே வெறுப்பை பரப்பி இந்தியர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதால் சகோதரத்துவம் சிதைக்கப்படுகிறது.

    பிரச்சாரங்களின் மூலம் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதனால் அநீதி பெருகுகிறது.

    அனைத்து இந்தியர்களும், அவர்கள் எந்த குழுவை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்த இக்கட்டான நேரத்தில் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும்.

    இந்த சகோதரத்துவ உணர்வை நாம் எப்போதும் வளர்த்து கொள்ள வேண்டும்.

    நமது வீடுகளையும், சமூகங்களையும், அமைப்புகளையும் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சோனியா காந்தி
    காங்கிரஸ்
    பாஜக

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    வளர்ந்த இந்தியாவிற்காக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடி மத்திய பிரதேசம்
    தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை அறிக்கை  தமிழ்நாடு
    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023 : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கால் இந்திய அணி
    கம்பம் திராட்சைக்கு கிடைத்த புவிசார் குறியீடு - நன்மைகள் என்ன? தமிழ்நாடு

    சோனியா காந்தி

    சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி இந்தியா

    காங்கிரஸ்

    ஈரோட்டில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வரை சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழ்நாடு
    'பொட்டு ஏன் வைக்கவில்லை': மகளிர் தினத்தன்று பெண்ணிடம் கத்திய பாஜக எம்பி இந்தியா
    மின்வெட்டால் தான் மக்கள் தொகை அதிகரித்தது: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு இந்தியா
    பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடக்கம்: 16 எதிர்க்கட்சிகள் சந்திப்பு மோடி

    பாஜக

    கர்நாடகா பாஜக எம்எல்ஏ மகனை அதிரடியாக கைது செய்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் கர்நாடகா
    வடகிழக்கு முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி இந்தியா
    வட மாநிலத் தொழிலாளர் பிரச்சனை: பாஜக அண்ணாமலை மீது வழக்கு தமிழ்நாடு
    பாஜக அண்ணாமலையை விசாரிக்க இருக்கும் போலீஸ் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025