NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் கைது - மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மறுப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் கைது - மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மறுப்பு
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் கைது - மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மறுப்பு

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் கைது - மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மறுப்பு

    எழுதியவர் Nivetha P
    Feb 15, 2023
    01:28 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு, திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக காவல்துறையினர் 9 தனிப்படைகளை அமைத்து தேடிவருகிறார்கள்.

    இது குறித்த விசாரணையில் கடந்த 3ம் தேதி பெங்களூரில் ஓர் எஸ்பிஐ ஏடிஎம்'ல் கொள்ளை கும்பல் ஒன்று திருவண்ணாமலையில் செய்தது போலவே வெல்டிங் மெஷின் கொண்டு பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.

    அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளும் இதோடு ஒத்துப்போவதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

    தொடர் விசாரணை

    கொள்ளையர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை-மாவட்ட எஸ்.பி. மறுப்பு

    இந்த 2 சம்பவங்களையும் ஹரியானாவை சேர்ந்த கொள்ளை கும்பல் செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், 2 தனிப்படைகள் ஹரியானாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது என்றும் செய்திகள் வெளியானது.

    மேலும் இந்த கொள்ளை சம்பவத்தையடுத்து தமிழக ஆந்திர எல்லை பகுதிகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே இது சம்பந்தமாக 6பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் ஓர் தகவல் வெளியானது.

    காரில் கொள்ளையர்கள் ஹரியானா தப்பிச்செல்ல முயன்றபொழுது அந்த 6 பேரும் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    ஆனால் இந்த தகவல் குறித்து மாவட்ட எஸ்.பி.கார்த்திகேயன் கூறுகையில், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவண்ணாமலை
    காவல்துறை
    காவல்துறை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி
    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா
    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்
    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் காவல்துறை

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா

    காவல்துறை

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் சங்கராபுரம் கோயில் கோமாதாவிற்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள் மாவட்ட செய்திகள்
    தமிழக அரசு - ஆவினில் இனி காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படும் இந்தியா
    தமிழ்நாடு-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி மதுரை
    ஆ.ராசாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கைத் தள்ளி வைத்த சிறப்பு நீதிமன்றம் திமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025