NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல்
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல்
    இந்தியா

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல்

    எழுதியவர் Nivetha P
    February 13, 2023 | 06:26 pm 1 நிமிட வாசிப்பு
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல்
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல்

    தமிழ்நாடு, திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங்மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் நடந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் கொள்ளையர்களால் எரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கொள்ளையர்களை கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு பெரும் சவாலாகவுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் 9 தனிப்படைகளை அமைத்து தேடிவருகிறார்கள். இதுகுறித்த விசாரணையில் கடந்த 3ம்தேதி பெங்களூரில் ஓர் எஸ்பிஐ ஏடிஎம்'ல் கொள்ளைக்கும்பல் ஒன்று திருவண்ணாமலையில் செய்தது போலவே வெல்டிங்மெஷின் கொண்டு பணத்தை கொள்ளையடித்து சென்றதாகவும், அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளும் இதோடு ஒத்துப்போவதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த 2 சம்பவங்களையும் ஹரியானாவை சேர்ந்த கொள்ளைக்கும்பல் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    2 தனிப்படைகள் ஹரியானாவிற்கு விரைந்தது

    இந்த சந்தேகத்தின் பேரில், 2 தனிப்படைகள் ஹரியானாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில் ஐ.ஜி. கண்ணன் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஏடிஎம் பற்றிய தொழில்நுட்பம் தெரிந்த நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும். வெளிமாநிலங்களில் இருந்து வரும் சந்தேகத்திற்குரியவர்களை கண்காணித்து வருகிறோம் என்று கூறினார். மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் சில தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் அவர்கள் தங்கள் கைவரிசையை காட்டவில்லை, குறிப்பிட்டவற்றில் மட்டுமே காட்டியுள்ளார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் முதன்முறையாக புதிய தொழில் நுணுக்கத்தில் இந்த கொள்ளை நடந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இன்னும் 3 நாட்களில் பிடிபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    திருவண்ணாமலை
    காவல்துறை
    காவல்துறை
    ஹரியானா

    திருவண்ணாமலை

    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை
    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் கைது - மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மறுப்பு காவல்துறை

    காவல்துறை

    கர்நாடகாவில் மாணவியை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கல்லூரி முதல்வர் கர்நாடகா
    ஆந்திராவில் இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை ஆந்திரா
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' மத்திய பிரதேசம்
    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு தூத்துக்குடி

    காவல்துறை

    தமிழக டிஜிபி பொதுமக்களுக்கு எச்சரிக்கை-'இரிடியம் முதலீடு' என்னும் பெயரில் மோசடி தமிழ்நாடு
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி

    ஹரியானா

    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்
    கனடாவில் இருந்து வரவழைத்து தன் காதலியை கொன்ற நபர் கைது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023