NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல்
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல்

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல்

    எழுதியவர் Nivetha P
    Feb 13, 2023
    06:26 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு, திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்'களில் கேஸ் வெல்டிங்மெஷின் கொண்டு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த கொள்ளை சம்பவம் நடந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் கொள்ளையர்களால் எரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இந்த கொள்ளையர்களை கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு பெரும் சவாலாகவுள்ளது.

    இதுதொடர்பாக காவல்துறையினர் 9 தனிப்படைகளை அமைத்து தேடிவருகிறார்கள்.

    இதுகுறித்த விசாரணையில் கடந்த 3ம்தேதி பெங்களூரில் ஓர் எஸ்பிஐ ஏடிஎம்'ல் கொள்ளைக்கும்பல் ஒன்று திருவண்ணாமலையில் செய்தது போலவே வெல்டிங்மெஷின் கொண்டு பணத்தை கொள்ளையடித்து சென்றதாகவும், அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளும் இதோடு ஒத்துப்போவதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த 2 சம்பவங்களையும் ஹரியானாவை சேர்ந்த கொள்ளைக்கும்பல் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    ஐ.ஜி.கண்ணன் தகவல்

    2 தனிப்படைகள் ஹரியானாவிற்கு விரைந்தது

    இந்த சந்தேகத்தின் பேரில், 2 தனிப்படைகள் ஹரியானாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது.

    இந்நிலையில் ஐ.ஜி. கண்ணன் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஏடிஎம் பற்றிய தொழில்நுட்பம் தெரிந்த நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும்.

    வெளிமாநிலங்களில் இருந்து வரும் சந்தேகத்திற்குரியவர்களை கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.

    மேலும், சிசிடிவி கேமராக்கள் மூலம் சில தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் அவர்கள் தங்கள் கைவரிசையை காட்டவில்லை, குறிப்பிட்டவற்றில் மட்டுமே காட்டியுள்ளார்கள் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து, தமிழ்நாட்டில் முதன்முறையாக புதிய தொழில் நுணுக்கத்தில் இந்த கொள்ளை நடந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இன்னும் 3 நாட்களில் பிடிபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவண்ணாமலை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா

    காவல்துறை

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025