NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாடு-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி
    தமிழ்நாடு-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    தமிழ்நாடு-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி

    எழுதியவர் Nivetha P
    Feb 09, 2023
    12:04 pm
    தமிழ்நாடு-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி
    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு

    தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி இந்திய ஜனாதிபதியான திரவுபதி முர்மு அவர்கள் வருகை தரவுள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு அவர் வருகை தருவதையடுத்து, அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 18ம் தேதியன்று திரவுபதி முர்மு அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரை விமான நிலையம் வருகிறார். இதனை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார். அதன் பின்னர் அவர் விமானம் மார்க்கமாக அங்கிருந்து கோவைக்கு செல்கிறார். இதனையடுத்து அவர் கோவை ஈஷா மையத்தில் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ளவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    2/2

    ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்

    ஜனாதிபதி வருகை குறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், டெல்லியில் இருந்து ஜனாதிபதி தமிழகம் வருகிறார் என்று அண்மையில் தகவல்கள் தெரிவிக்கபட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தகவல் வெளியாகியிருந்தாலும் அவர் வருகை குறித்த உறுதியான தகவல் ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் தெரிய வரும். எனினும், நாங்கள் இப்பொது இருந்தே பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் பதவி ஏற்ற பின்னர் முதன்முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மதுரை
    டெல்லி
    தமிழ்நாடு

    மதுரை

    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை விளக்க கருத்தரங்கு கூட்டம் - எஸ்.பி. பரிசீலிக்க உத்தரவு தூத்துக்குடி
    2023ம் ஆண்டு பட்ஜெட் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததையடுத்து போராட்டம் பட்ஜெட் 2023
    மதுரையில் மாடுகளை திருடிய வடமாநில கும்பல் கைது - சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி காவல்துறை
    மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது பொங்கல் திருநாள்

    டெல்லி

    வைரலாக பேசப்படும் மல்லிகார்ஜுன கார்கேவின் லூயி விட்டான் மப்ளர் இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது ஜம்மு காஷ்மீர்
    டெல்லி-ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் குறித்து திருமாவளவன் கேள்விக்கு மத்திய அரசு பதில் தொல். திருமாவளவன்
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா

    தமிழ்நாடு

    தமிழக அரசு - ஆவினில் இனி காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படும் இந்தியா
    தமிழகத்தில் சங்கராபுரம் கோயில் கோமாதாவிற்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள் மாவட்ட செய்திகள்
    வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல் வேங்கை வயல்
    தமிழ்நாடு, நெல்லையப்பர் கோயிலில் பர்தா அணிந்த பெண் வருகை - இந்து முன்னணி வலியுறுத்தல் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023