NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் சங்கராபுரம் கோயில் கோமாதாவிற்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் சங்கராபுரம் கோயில் கோமாதாவிற்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள்
    தமிழகத்தில் சங்கராபுரம் கோயில் கோமாதாவிற்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள்

    தமிழகத்தில் சங்கராபுரம் கோயில் கோமாதாவிற்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள்

    எழுதியவர் Nivetha P
    Feb 08, 2023
    06:36 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் அவ்வபோது சில வித்தியாசமான செய்தி தென்படும். இன்றைய காலகட்டத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி என்பது மிகவும் சாதாரணமான ஓர் நிகழ்வு தான்.

    எல்லா நாடுகளிலும் கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படும்.

    தாயாய் மறு ரூபம் எடுக்கப்போவதால் கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு பெரியோர்களால் ஆசீர்வதிக்கப்படுவதோடு, பரிசுகளும் அந்த பெண்ணுக்கு வழங்கப்படும்.

    ஆனால் இதில் இருந்து வேறுபடும் இந்தியா, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சங்கராபுரம் மேலப்பட்டு கிராமத்தில் திரிபுரசுந்தரி உடனுறை மேலகங்கேஸ்வரர் கோயில் மாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

    இந்த கோயிலில் பசு மாடு ஒன்று அம்சவேணி என பெயரிடப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த பசு கருவுற்றுள்ளது.

    ஆர்வத்துடன் வந்த மக்கள்

    500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பசு மாட்டின் வளைகாப்பு நிகழ்ச்சி

    அந்த பசுவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த கோயில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் முடிவுசெய்துள்ளனர்.

    இதனையடுத்து யாகவேள்வி பூஜையுடன் பசுமாட்டுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியானது துவங்கியது.

    இதனையொட்டி பொதுமக்கள் வளையல் தட்டுகள், சீர்வரிசை தட்டுகள் ஆகியவற்றுடன் கோயிலுக்குள் வந்தனர்.

    அதன்பின்னர் கோயில் கோமாதாவிற்கு மாலை அணிவிக்கப்பட்டு, யாகவேள்வி பூஜை நடத்தப்பட்டது.

    அதனைதொடர்ந்து, மாட்டின் காலில் சலங்கை கட்டி, கழுத்தில் கட்டப்பட்டுள்ள கயிறு மற்றும் கொம்புகளில் வளையல்களை அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில், குழந்தை இல்லா தம்பதிகள் பங்கேற்று மாட்டிற்கு வளையல் அணிவித்து, மஞ்சள் பூசி வணங்கிசென்றனர்.

    பசுமாட்டிற்கு வளைகாப்பு நடத்தப்பட்டது குறித்து அறிந்த சுற்றுவட்டார மக்கள் ஆர்வத்துடன் இங்குவந்து பசுவை கண்டு நெகிழ்ச்சி அடைந்து செல்கிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்
    டிரெண்டிங் கதை

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டி தேர்தல்
    கோயம்பேடு பேருந்து நிலைய வாகன நெரிசலை குறைக்க தமிழநாடு அரசு நடவடிக்கை சென்னை
    கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி இந்தியா
    வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி காவல்துறை

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு

    டிரெண்டிங் கதை

    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை வைரல் செய்தி
    ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்மணி உலக செய்திகள்
    365 நாளில் 3330 முறை உணவு ஆர்டர் செய்த இளைஞர்! இந்தியா
    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன? உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025