NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    இந்தியா

    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    எழுதியவர் Nivetha P
    Feb 07, 2023, 04:42 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    தமிழகத்தில் கடந்தமாதமும் இம்மாதம் முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்தன. இதனால் பாதிப்படைந்த டெல்டாமாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்கு சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஆய்வறிக்கையை அமைச்சர்கள் அவரிடம் சமர்ப்பித்த நிலையில், ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு முதல்வர் நிவாரண அறிக்கைகளை நேற்று(பிப்.,6) வெளியிட்டார். அதன்படி, பாதிப்படைந்த பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என பல குறிப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செயலாளர் வரதராஜன், நிர்வாக குழு தங்கராஜ் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தனர்.

    முழு காப்பீடு மற்றும் மாநில அரசு நிதியும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.35, 000

    இதனைதொடர்ந்து, பருவம் தவறிய கனமழையால் சேதமடைந்த நெல் உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு முழு நிவாரணம் அளிக்கவேண்டும். அறுவடை காலத்தில் எதிர்பாரா மழையால் அழிவிற்கு உள்ளான சம்பா தாளடி நெற்பயிர்களுக்கு முழு காப்பீடு மற்றும் மாநில அரசு நிதியும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.35, 000 வழங்கிட வேண்டும். உளுந்து, பயிர், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட தானியங்கள் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்பட வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சீர்காழியில் விடுபட்ட 17 பஞ்சாயத்துக்கும் உடனடியாக இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்தில் நடந்தது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்
    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இளையராஜா

    மு.க ஸ்டாலின்

    தமிழகத்தில் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது
    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல் தமிழ்நாடு
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது விருதுநகர்

    தமிழ்நாடு

    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் கோவை
    தமிழக அரசின் ஆணையால், டபுள் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் மோகன் ராம் வைரல் செய்தி
    திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம் மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023