NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகை ஏக்கருக்கு ரூ.35,000 கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    எழுதியவர் Nivetha P
    Feb 07, 2023
    04:42 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் கடந்தமாதமும் இம்மாதம் முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த பயிர்கள் சேதமடைந்தன.

    இதனால் பாதிப்படைந்த டெல்டாமாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்கு சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி ஆய்வறிக்கையை அமைச்சர்கள் அவரிடம் சமர்ப்பித்த நிலையில், ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு முதல்வர் நிவாரண அறிக்கைகளை நேற்று(பிப்.,6) வெளியிட்டார்.

    அதன்படி, பாதிப்படைந்த பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என பல குறிப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செயலாளர் வரதராஜன், நிர்வாக குழு தங்கராஜ் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தனர்.

    வழங்க கோரிக்கை

    முழு காப்பீடு மற்றும் மாநில அரசு நிதியும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.35, 000

    இதனைதொடர்ந்து, பருவம் தவறிய கனமழையால் சேதமடைந்த நெல் உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு முழு நிவாரணம் அளிக்கவேண்டும்.

    அறுவடை காலத்தில் எதிர்பாரா மழையால் அழிவிற்கு உள்ளான சம்பா தாளடி நெற்பயிர்களுக்கு முழு காப்பீடு மற்றும் மாநில அரசு நிதியும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.35, 000 வழங்கிட வேண்டும்.

    உளுந்து, பயிர், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட தானியங்கள் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

    நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    சீர்காழியில் விடுபட்ட 17 பஞ்சாயத்துக்கும் உடனடியாக இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்தில் நடந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் இந்திய ராணுவம்
    பதிலடி நடவடிக்கையாக, இந்திய தூதரை 'நம்பிக்கையில்லாதவர்' என்று பாகிஸ்தான் அறிவிப்பு; நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு பாகிஸ்தான்
    மைக்ரோசாப்ட் அதன் இரண்டாவது பணிநீக்கச் சுற்றில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்கிறார் - பதவியேற்கும் முதல் பௌத்தர் உச்ச நீதிமன்றம்

    தமிழ்நாடு

    'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல் போக்குவரத்து விதிகள்
    மனித கழிவுகள் கலக்கப்பட்ட தொட்டியை இடிக்க கோரிய DYFI சங்கத்தினர் கைது இந்தியா
    தை அமாவாசை - சதுரகிரியில் மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு இந்தியா
    மாணவியின் கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாரஸ்ய பதில் இந்தியா

    மு.க ஸ்டாலின்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி - தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025