NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாகரிகம் வளர்ச்சி அடைந்ததில் கோயில்களுக்கு பெரும் பங்கு உண்டு: சென்னை உயர்நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாகரிகம் வளர்ச்சி அடைந்ததில் கோயில்களுக்கு பெரும் பங்கு உண்டு: சென்னை உயர்நீதிமன்றம்
    கந்த சஷ்டி திருவிழா திருச்செந்தூர் கோவில்

    நாகரிகம் வளர்ச்சி அடைந்ததில் கோயில்களுக்கு பெரும் பங்கு உண்டு: சென்னை உயர்நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Dec 15, 2022
    05:24 pm

    செய்தி முன்னோட்டம்

    நாகரிகமும் சமூகமும் வளர்ச்சியடைவதில் கோவில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதனால், கோவில்களைப் பாதுகாத்து அதன் புனித தன்மையைக் காப்பது நமது முதன்மையான கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

    கோவில்கள் காலத்தின் சோதனைகளை எல்லாம் தாங்கி நிற்பதால் அவை தொல்லியல் மற்றும் வரலாற்று சிறப்புமிக்கவை. திருவிழா நேரங்களில் கோவிலின் புனிதத்தைப் பேணி, பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து, திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவின் போது கோவிலின் வெளிப் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கக்கூடாது என்று கோவில் நிர்வாகம் உறுதியளித்தது பின்பற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    நீதிமன்றம்

    திருச்செந்தூர் கந்த சஷ்டி தொடர்பான வழக்கு

    பொதுவாக, ஐப்பசி ஆறாம் நாளிலிருந்து ஆறு நாட்கள் நடக்கும் கந்த சஷ்டி திருவிழாவின் போது, ​​பக்தர்கள் விரதம் இருந்து, 'கந்த சஷ்டி கவசம்' பாடி, வீட்டிற்கு செல்லாமல் கோவிலில் வழிபாடு நடத்துவார்கள்.

    இது போன்ற நேரங்களில், பக்தர்கள் பொதுவாக கோவிலின் வெளிப்புற பிரகாரத்தில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த வழக்கம் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்தது. ஆனால், இந்த வருடம் கோவில் நிர்வாகம் இதற்கு அனுமதி வழங்கவில்லை.

    இதை எதிர்த்து தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

    இதை விசாரித்த நீதிபதிகள் மேற்கண்ட தீர்ப்பை வழங்கி, "கோவிலை பேணி காப்பதுடன் பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான கட்டுப்பாடுகளை விதிப்பது ஆகமங்களின் பொறுப்பு"என்றும் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் சென்னை
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! அமெரிக்கா

    இந்தியா

    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு தேர்தல்
    மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம் வாழ்க்கை
    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! கூகிள் தேடல்
    புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025