NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாகரிகம் வளர்ச்சி அடைந்ததில் கோயில்களுக்கு பெரும் பங்கு உண்டு: சென்னை உயர்நீதிமன்றம்
    இந்தியா

    நாகரிகம் வளர்ச்சி அடைந்ததில் கோயில்களுக்கு பெரும் பங்கு உண்டு: சென்னை உயர்நீதிமன்றம்

    நாகரிகம் வளர்ச்சி அடைந்ததில் கோயில்களுக்கு பெரும் பங்கு உண்டு: சென்னை உயர்நீதிமன்றம்
    எழுதியவர் Sindhuja SM
    Dec 15, 2022, 05:24 pm 1 நிமிட வாசிப்பு
    நாகரிகம் வளர்ச்சி அடைந்ததில் கோயில்களுக்கு பெரும் பங்கு உண்டு: சென்னை உயர்நீதிமன்றம்
    கந்த சஷ்டி திருவிழா திருச்செந்தூர் கோவில்

    நாகரிகமும் சமூகமும் வளர்ச்சியடைவதில் கோவில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதனால், கோவில்களைப் பாதுகாத்து அதன் புனித தன்மையைக் காப்பது நமது முதன்மையான கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. கோவில்கள் காலத்தின் சோதனைகளை எல்லாம் தாங்கி நிற்பதால் அவை தொல்லியல் மற்றும் வரலாற்று சிறப்புமிக்கவை. திருவிழா நேரங்களில் கோவிலின் புனிதத்தைப் பேணி, பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவின் போது கோவிலின் வெளிப் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கக்கூடாது என்று கோவில் நிர்வாகம் உறுதியளித்தது பின்பற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் கந்த சஷ்டி தொடர்பான வழக்கு

    பொதுவாக, ஐப்பசி ஆறாம் நாளிலிருந்து ஆறு நாட்கள் நடக்கும் கந்த சஷ்டி திருவிழாவின் போது, ​​பக்தர்கள் விரதம் இருந்து, 'கந்த சஷ்டி கவசம்' பாடி, வீட்டிற்கு செல்லாமல் கோவிலில் வழிபாடு நடத்துவார்கள். இது போன்ற நேரங்களில், பக்தர்கள் பொதுவாக கோவிலின் வெளிப்புற பிரகாரத்தில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த வழக்கம் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்தது. ஆனால், இந்த வருடம் கோவில் நிர்வாகம் இதற்கு அனுமதி வழங்கவில்லை. இதை எதிர்த்து தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் மேற்கண்ட தீர்ப்பை வழங்கி, "கோவிலை பேணி காப்பதுடன் பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான கட்டுப்பாடுகளை விதிப்பது ஆகமங்களின் பொறுப்பு"என்றும் தெரிவித்துள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியானது - பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் அதிமுக
    இமாச்சல் வரை பரவிய H3N2 வைரஸ்: 10 வார குழந்தைக்கு பாதிப்பு இந்தியா
    கண் நோய்களை கண்டறியும் AI-ஆப்! அசத்திய 11 வயது கேரளா சிறுமி செயற்கை நுண்ணறிவு
    ஐபிஎல் : 2018 சீசனிலிருந்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் கே.எல்.ராகுல் முதலிடம் ஐபிஎல்

    தமிழ்நாடு

    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல் மாவட்ட செய்திகள்
    காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்? இந்தியா
    மேங்கோ பைட், கோகோ மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய்..இதெல்லாம் கேட்டதும் உங்கள் நினைவு வருவது என்ன? வைரல் செய்தி
    தமிழகத்தில் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    இந்தியா

    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி ராகுல் காந்தி
    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஜியோ

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023