NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தெலுங்கு தேசக்கட்சியினர் போராட்டம் - ஆந்திராவில் நிலவும் பதற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெலுங்கு தேசக்கட்சியினர் போராட்டம் - ஆந்திராவில் நிலவும் பதற்றம்
    தெலுங்கு தேசக்கட்சியினர் போராட்டம் - ஆந்திராவில் நிலவும் பதற்றம்

    தெலுங்கு தேசக்கட்சியினர் போராட்டம் - ஆந்திராவில் நிலவும் பதற்றம்

    எழுதியவர் Nivetha P
    Sep 09, 2023
    11:19 am

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசக்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு இன்று(செப்.,9)காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

    திறன் மேம்பாட்டத்துறையில் சந்திரபாபு நாயுடு ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தநிலையில் ஆந்திர மாநில சிஐடி போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

    சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய சிஐடி போலீசார் அதிகாலை 3.30 மணியளவில் ஆந்திர-நந்தியாலாவில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    ஆனால், நள்ளிரவில் கைது செய்ய கூடாது என்று கூறி, தெலுங்கு தேச கட்சியினர் போலீசாரை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து, சந்திரபாபு நாயுடு காலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புகளோடு விஜயவாடாவிற்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.

    இதனைத்தொடர்ந்து இவரின் கைது நடவடிக்கைக்கு எதிராக தெலுங்குத்தேசக்கட்சியினர் போராட்டம் செய்ய துவங்கியுள்ளனர்.

    கைது 

    போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் கைது 

    மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் டயர்களை எரித்து தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    மேலும், சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    சட்டப்பிரிவு 120பி-குற்றச்சதி, 420-நேர்மையற்ற வழியில் சொத்து சேர்ப்பது, 465-போலி செய்தல் உள்ளிட்ட ஐபிசி பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து சந்திரபாபு நாயுடுவின் வழக்கறிஞர் கூறுகையில், "அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருப்பதால் சிஐடி அதிகாரிகள் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர"என்றும்,

    "ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளோம் என்று கூறியுள்ளார்" என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    போராட்டம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    கைது

    ஆருத்ரா வழக்கு - தலைமறைவாக இருந்த இயக்குநர்களுள் ஒருவர் கைது  சென்னை
    ஆலந்தூர் ரயில்வே ஸ்டேஷன் கொலை வழக்கு - கைதானவர் மீதான குண்டர் சட்டம் ரத்து  காவல்துறை
    இருவிரல் பரிசோதனை விவகாரம் - தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  காவல்துறை
    பாக்., பெண் ஏஜென்டிடம் முக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்த வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது வெளியுறவுத்துறை

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு தமிழ்நாடு
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு தமிழ்நாடு
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025