NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு விபத்து: மீட்பு பணியில் சிக்கல் என்கிறார் அமைச்சர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு விபத்து: மீட்பு பணியில் சிக்கல் என்கிறார் அமைச்சர்
    SLBC சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் தொய்வடைந்துள்ளதாக தெரிகிறது

    தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு விபத்து: மீட்பு பணியில் சிக்கல் என்கிறார் அமைச்சர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 24, 2025
    08:19 am

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடிந்து விழுந்த பகுதியை அடைய குழுக்கள் போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் நிலைமை 'மோசமாக இருக்கிறது' என்றும், நீர் வரத்து மீட்புப்பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் தெலுங்கானா அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    இதனால் மீட்பு பணி மேலும் தொய்வடைந்துள்ளதாக தெரிகிறது.

    "சுரங்கப்பாதையில் இயற்கையான பாறைகள் தளர்வானதால், திடீரென தண்ணீர் மற்றும் சேறு உள்வந்து, சுரங்கப்பாதையில் சுமார் 12-13 அடி வரை நிரம்பியது. இது மிகவும் சவாலான சூழ்நிலை, மேலும் நெருக்கடியைத் தீர்க்க தொழில்நுட்ப வல்லுநர்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர்," என்று அமைச்சர் விளக்கினார்.

    மீட்பு பணிகள்

    தண்ணீர் கசிவை வெளியேற்றவும், சிக்கியவர்களுக்கு பிராணவாயு அனுப்பும் பணியும் தீவிரம்

    "தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றவும், சுரங்கப்பாதையில் ஆக்ஸிஜனை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீட்புக் குழுவினர் சுரங்கப்பாதையில் உள்ள சேறு மேடுகளை அகற்றி, விபத்து நடந்த இடத்தை அடைய மாற்று வழிகளை ஆய்வு செய்து வருகின்றனர்," என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சிக்கியுள்ள தொழிலாளர்களில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மனோஜ் குமார் (திட்டப் பொறியாளர்), உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் (களப் பொறியாளர்), ஜார்க்கண்டை சேர்ந்த சந்தீப் சாஹு (தொழிலாளர்), ஜார்க்கண்டை சேர்ந்த ஜடக்ஸ் (தொழிலாளர்), ஜார்க்கண்டை சேர்ந்த சந்தோஷ் சாஹு (தொழிலாளர்), ஜார்க்கண்டை சேர்ந்த அனுஜ் சாஹு (தொழிலாளர்), ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த சன்னி சிங் (தொழிலாளர்) மற்றும் பஞ்சாபை சேர்ந்த குர்பிரீத் சிங் (தொழிலாளர்) ஆகியோர் அடங்குவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கானா
    சுரங்கபாதை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    தெலுங்கானா

    தெலங்கானா பிஆர்எஸ் MLA லாஸ்யா நந்திதா கார் விபத்தில் பலி  விபத்து
    வீடியோ: தெலுங்கானாவில் பறந்து வந்து மற்றொரு வாகனம் மீது மோதிய கார்  விபத்து
    கைது செய்யப்பட்ட பிஆர்எஸ் தலைவர் கே கவிதா டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார்  டெல்லி
    பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவை மார்ச் 23 வரை காவலில் வைக்க அனுமதி  டெல்லி

    சுரங்கபாதை

    உத்தர்காசி சுரங்கப்பாதை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அர்னால்ட் டிக்ஸ்; யார் அவர்? உத்தரகாண்ட்
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணி: இனி மெஷின் வேண்டாம், கைகளாலேயே துளையிட திட்டம் உத்தரகாண்ட்
    உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இந்திய ராணுவம் வரவழைப்பு உத்தரகாண்ட்
    சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தவுள்ள எலி துளை சுரங்கம் என்றால் என்ன? உத்தரகாண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025