NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சபரிமலை : ஆன்லைன் முன்பதிவு மட்டுமே அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சபரிமலை : ஆன்லைன் முன்பதிவு மட்டுமே அனுமதி

    சபரிமலை : ஆன்லைன் முன்பதிவு மட்டுமே அனுமதி

    எழுதியவர் Sindhuja SM
    May 04, 2024
    08:36 pm

    செய்தி முன்னோட்டம்

    சபரிமலை கோவிலில் ஸ்பாட் புக்கிங் நடைமுறையை நிறுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) முடிவு செய்துள்ளது.

    கடந்த சீசனில் சபரிமலைக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது, இதனால் புனித மலையில் உள்ள யாத்ரீகர் மேலாண்மை நெறிமுறை பாதிக்கப்பட்டது.

    எனவே, திருவிதாங்கூர் தேவசம் வாரியம்(டிடிபி) அடுத்த சீசனில் இருந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

    எனவே, ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கான இடங்களை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நிலக்கல் மற்றும் பம்பை உள்ளிட்ட அனைத்து ஸ்பாட் புக்கிங் வசதிகளும் செயல்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    "தினசரி முன்பதிவுகளின் எண்ணிக்கை 80,000 ஆக வரையறுக்கப்படும், சீசனுக்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்வதற்கான இடங்கள் திறந்திருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை 

    ஆன்லைன் முன்பதிவுகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு வலியுறுத்தல் 

    முந்தைய சீசனில் இதே போல ஆன்லைன் முன்பதிவுகளில் வரம்புகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், ஸ்பாட் புக்கிங் வசதி மூலம் அதிகமான மக்கள் மலைப்பகுதிக்குள் நுழைந்தனர்.

    இந்த ஆண்டு ஜனவரியில் முடிவடைந்த முந்தைய வருடாந்திர யாத்திரை காலத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்ததாக மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.

    சீசன் முழுவதும், புனித யாத்திரை மண்டலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், இடுக்கி மற்றும் கோட்டயத்தில் உள்ள குமுளி வரையிலான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கூட்டத்தை நிர்வகிப்பது கடினமாக இருப்பதால், மகரவிளக்கு திருவிழாவின் போது அதன் ஆன்லைன் முன்பதிவுகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு காவல்துறை மற்றும் பத்தனமத்திட்டா மாவட்ட நிர்வாகம் டிடிபி-யிடம் வலியுறுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சபரிமலை
    கேரளா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சபரிமலை

    சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்  கேரளா
    சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்  கேரளா
    சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள் தமிழ்நாடு
    சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்? கம்யூனிஸ்ட்

    கேரளா

    கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - அதிர்ச்சி ரிப்போர்ட்  கொரோனா
    மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பரவல் - கேரளாவில் ஒருவர் பலி  கொரோனா
    புதிய வகை தொற்று பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்  தொற்று
    2023 Year Roundup- விருதுகள் வென்ற இந்திய சினிமாக்கள் ஒரு பார்வை திரைப்பட விருது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025