NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ கிருத்திவாசன்.. யார் இவர்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ கிருத்திவாசன்.. யார் இவர்?
    டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக இணைந்தார் கிருத்திவாசன்

    டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ கிருத்திவாசன்.. யார் இவர்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 01, 2023
    04:57 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ்-ன் புதிய தலைமை செயல் அதிகாரியாக கிருத்திவாசன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் கோபிநாத் தன்னுடைய சிஇஓ பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, கடந்த மார்ச் மாதம் கிருத்திவாசனை சிஇஓ-டெஸிக்னேட்டாக அறிவித்திருந்தது டிசிஎஸ்.

    அதனைத் தொடர்ந்து, டிசிஎஸ்ஸின் 50 ஆண்டு காலப்பயணத்தில் இன்று அந்நிறுவனத்தின் 5-வது தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் கிருத்திவாசன்.

    இதற்கு முன்னதாக டிசிஎஸ் நிறுவனத்தின் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டு வணிகக் குழுவின உலகளாவிய தலைவராக செயல்பட்டு வந்திருக்கிறார் கிருத்திவாசன். மேலும், இவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    டிசிஎஸ்

    கிருத்திவாசன் யார்? 

    இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் துறையில் இளங்கலைப் பட்டமும், கான்பூர் ஐஐடியில் தொழிற்துறை மற்றும் மேலாண்மை துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.

    1989-ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தில் இணைந்த கிருத்திவாசன், அந்நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் தலைமைப் பதவியை வகித்திருக்கிறார்.

    டிசிஎஸ் நிறுவனத்தில் விநியோகம், வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை, திட்ட மேலாண்மை மற்றும் விற்பனை எனப் பல துறைகளில் அனுபவம் பெற்றவர் கிருத்திவாசன்.

    டிசிஎஸ் இபீரோஅமெரிக்கா மற்றும் டிசிஎஸ் அயர்லாந்தின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராகவும் இருந்திருக்கிறார். மேலும், டிசிஎஸ் டெக்னாலஜி சொல்யூஷன் AG-யின் மேற்பார்வைக் குழுவிலும் இடம்பெற்றிருக்கிறார்.

    முன்னாள் சிஇஓ-வான ராஜேஷ் கோபிநாத், தன்னுடைய பொறுப்புகளை புதிய சிஇஓ-விடம் ஒப்படைப்பதற்காக செப்டம்பர் 15-ம் தேதி வரை பணியில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டிசிஎஸ்
    இந்தியா

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    டிசிஎஸ்

    ரூ.15,000 கோடி மதிப்புடைய BSNL ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா குழுமம்! டாடா
    அலுவலகம் வந்து பணி செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதா டிசிஎஸ்? இந்தியா

    இந்தியா

    தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்! தமிழகம்
    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA உயர்நீதிமன்றம்
    காயம் காரணமாக FBK போட்டியிலிருந்து விலகினார் நீரஜ் சோப்ரா! இந்திய அணி
    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025