NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அலுவலகம் வந்து பணி செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதா டிசிஎஸ்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    அலுவலகம் வந்து பணி செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதா டிசிஎஸ்?
    அலுவலகம் வந்து பணி செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதா டிசிஎஸ்

    அலுவலகம் வந்து பணி செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதா டிசிஎஸ்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 01, 2023
    03:18 pm

    செய்தி முன்னோட்டம்

    கொரோனா காலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதியளித்தது.

    ஆனால், தற்போது அந்த பேரிடர் காலத்தில் இருந்து வெகு காலத்தைக் கடந்த பிறகும் அந்நிறுவனத்தின் பல உழியர்கள் வீட்டியலிருந்தபடியே தான் பணி செய்து வருகின்றனர்.

    100% வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதை தங்கள் நிறுவனம் அனுமதிக்காது என கடந்த ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது டிசிஎஸ்.

    தற்போது, ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது அலுவலகம் வந்து வேலை பார்க்க வேண்டும் என டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

    மேலும், ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் 12 நாட்களாவது அலுவலகம் வந்து வேலை பார்க்காத ஊழியர்களுக்கு டிசிஎஸ் நிறுவனம் மெமோ அனுப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

    டிசிஎஸ்

    குற்றச்சாட்டை மறுத்த டிசிஎஸ்: 

    தங்கள் மேல் வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது டிசிஎஸ் நிறுவனம்.

    ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 3 நாட்களாவது அலுவலகம் வந்து வேலை பார்க்க வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தியது உண்மை தான். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை, எனத் தெரிவித்திருக்கிறது டிசிஎஸ்.

    அந்நிறுவனக் கொள்கைகளின்படி ஒரே நேரத்தில் 25% மேல் ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து வேலை பார்க்க வேண்டியதில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறது.

    மேலும், ஒரு திட்டங்களின் தேவைக்கேற்ப ஊழியர்களை அலுவலகம் வந்து பணியாற்ற கேட்டுக் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறது டிசிஎஸ்.

    கடந்த இரு ஆண்டுகளில் புதிய ஊழியர்கள் பலரும் நிறுவனத்தில் பணியில் இணைந்திருக்கிறார்கள், அவர்களும் அனுபவம் பெறவேண்டும் என தங்கள் நிறுவனம் விரும்புவதாகக் குறிப்பிட்டிருக்கிறது டிசிஎஸ்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டிசிஎஸ்
    இந்தியா

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    டிசிஎஸ்

    ரூ.15,000 கோடி மதிப்புடைய BSNL ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா குழுமம்! டாடா

    இந்தியா

    ஊழல் வழக்கு: ரோல்ஸ் ராய்ஸ் மீது சிபிஐ வழக்கு பதிவு  ரோல்ஸ் ராய்ஸ்
    இந்தியாவில் ஸ்டார்ட்-அப்பை பதிவு செய்வதற்கான வழிமுறை என்ன? ஸ்டார்ட்அப்
    தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்! தமிழகம்
    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA உயர்நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025