NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரூ.15,000 கோடி மதிப்புடைய BSNL ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா குழுமம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.15,000 கோடி மதிப்புடைய BSNL ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா குழுமம்!
    ரூ.15,000 கோடி மதிப்புடைய BSNL ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா குழுமம்.

    ரூ.15,000 கோடி மதிப்புடைய BSNL ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா குழுமம்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 22, 2023
    12:11 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா முழுவதும் 4G வலைப்பின்னலை அமைப்பதற்கான BSNL-ன் ஒப்பந்தத்தை கைப்பற்றியிருக்கிறது டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமையிலான கூட்டமைப்பு.

    ரூ.15,000 கோடிக்கு மேல் மதிப்பிடப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தைக் கைப்பற்றியிருப்பதாக பங்குச்சந்தை தாக்கலின் போது தெரிவித்திருக்கிறது டிசிஎஸ் நிறுவனம்.

    டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தேஜஸ் நெட்வொர்க், இந்திய தொலைத்தொடர்பு ஆணையத்தின் கீழ் செயல்படும் இந்திய தொலைபேசி நிறுவனம் மற்றும் மத்திய அரசின் C-DOT அமைப்பு ஆகிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் அடங்கிய கூட்டமைப்பு இந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்றியிருக்கிறது.

    இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் 4G வசதிகள் அளிக்கப்படாத தொலைவில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் 4G வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது BSNL.

    டாடா

    புதுப்பிக்கப்படும் BSNL: 

    BSNL நிறுவனத்தை புதுப்பிக்க ரூ.1.64 லட்சம் கோடிக்கு அனுமதி வழங்கியது மத்திய அரசு. இதில் ரூ.43,964 கோடி நிதியுதவியாகவும், ரூ.1.20 லட்சம் கோடிக்கு நிதியல்லாத பிற உதவிகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    தற்போது டிசிஎஸ்ஸூடன் செய்யப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தமும் அதன் ஒரு பகுதியாகவே பார்க்ப்படுகிறது. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா முழுவதும் 100,000 4G டவர்கள் அமைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    24,600 4G டவர்களை 4G வசதியே இல்லாத இடங்களில் அமைக்கவிருப்பதாக கடந்த வாரமே அறிவித்திருந்தது இந்திய தொலைதொடர்புத் துறை. மேலும், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 4G வசதிகள் இல்லாத கிராமங்களில் கூட 4G வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டாடா
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    டாடா

    ஊழியர்களுக்கு AI பயிற்சி வகுப்பு நடத்தும் ஐடி நிறுவனங்கள்! செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவின் அம்பானி, டாடா, பிர்லா போன்றோர் வசிக்கும் இடங்கள் எங்கே எனத்தெரியுமா? இந்தியா
    விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா நிறுவனம் - ஆடிப்போன மற்ற நிறுவனங்கள்  டாடா மோட்டார்ஸ்
    நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷனை வெளியிட்டது டாடா  டாடா மோட்டார்ஸ்

    இந்தியா

    கேன்ஸ் திரைப்பட விழாவில் வேஷ்டி சட்டையுடன் வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன்  பிரான்ஸ்
    இந்தியாவின் 1% செல்வந்தர்களில் ஒருவராக சேர உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை!  உலகம்
    இந்தியாவின் 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை  என்ஐஏ
    எஸ்ஏஎப்எப் கால்பந்து கோப்பை 2023 : ஒரே குழுவில் இந்தியா-பாகிஸ்தான்! கால்பந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025