NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் 28.71 கோடியாக அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை: சுற்றுலாத்துறை அமைச்சர் பெருமிதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டில் 28.71 கோடியாக அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை: சுற்றுலாத்துறை அமைச்சர் பெருமிதம்
    தமிழ்நாட்டில் அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

    தமிழ்நாட்டில் 28.71 கோடியாக அதிகரித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை: சுற்றுலாத்துறை அமைச்சர் பெருமிதம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 20, 2024
    03:13 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாட்டில் சென்றாண்டில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை 28.71 கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக, தமிழக அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்தார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் 43,283 பழமையான கோவில்கள், 1,076 கி.மீ நீளமான கடற்கரை, 18 வனவிலங்கு சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் சரணாலயங்கள், 5 புலிகள் காப்பகங்கள் மற்றும் உலக பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட 6 தலங்கள் உண்டு. இவை அனைத்தும் உலகளாவிய சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தமிழகத்தின் சிறப்பான சுற்றுலாத்தளங்களாக விளங்குகின்றன" என்றார்.

    கொள்கை

    சுற்றுலாத்துறையின் வருமானத்தை அதிகரிக்கவும் நடவடிக்கைகள்

    ஆளும் தமிழக அரசின் கொள்கையின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநில உள்நாட்டு உற்பத்தியில், சுற்றுலாவின் பங்களிப்பை 12% ஆக உயர்த்தவும் சுற்றுலா மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில் 25 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இந்த கொள்கையின் மூலம், சுற்றுலா துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், நிகழ்ச்சிகள், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் கலைத் திருவிழாக்களை நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதனால், 2020ஆம் ஆண்டில் 14.18 கோடியாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை தற்போது உயர்ந்து 2023 இல் 28.71 கோடியாக அதிகரித்துள்ளது என்றார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் (உள்நாட்டு மற்றும் வெளிநாடு) வருகை எண்ணிக்கையை 28.71 கோடியாக உயர்த்தி சாதனை படைத்திருக்கிறது திராவிட மாடல் அரசு!

    மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.ராஜேந்திரன் அவர்களின் அறிக்கை.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR @CMOTamilnadu @mkstalin pic.twitter.com/rAJuVP6SSe

    — TN DIPR (@TNDIPRNEWS) December 20, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுற்றுலாத்துறை
    சுற்றுலா
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானின் கிரானா மலைகளில் கதிர்வீச்சு கசிவா? அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு மறுக்கிறது பாகிஸ்தான்
    கெனிஷா வாழ்வின் ஒளி... நல்ல தந்தையாக தொடர்வேன்.. ஆர்த்தி ரவியின் அறிக்கைக்கு ரவி மோகன் பதில் ரவி
    ஆப்பிள் உற்பத்தியை இந்தியாவில் விரிவுப்படுத்த வேண்டாம் : டிம் குக்கிடம் அறிவுறுத்திய டிரம்ப் ஆப்பிள்
    ஐபிஎல் 2025இல் தற்காலிக மாற்று வீரர்களை சேர்த்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி... ஆனால் ஒரு கண்டிஷன் ஐபிஎல் 2025

    சுற்றுலாத்துறை

    எழில் கொஞ்சும் கேரளாவில் நீங்கள் ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்கள் கேரளா
    ஊட்டியில் ரோஜா கண்காட்சி நாளை முதல் துவக்கம்  ஊட்டி
    உலகில், ஜெயிலே இல்லாத நகரம் எது தெரியுமா?  சுற்றுலா
    ஊட்டி மலர் கண்காட்சி - டிஜிபி சைலேந்திர பாபுவுடன் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள் ஊட்டி

    சுற்றுலா

    ₹300 மதிப்புள்ள நகைகளை ₹6 கோடிக்கு அமெரிக்கா டூரிஸ்டிடம் விற்ற ஜெய்ப்பூர் நகைக்கடைக்காரர் கைது  அமெரிக்கா
    ஜெய்சால்மர்: தங்க நகரத்தின் கட்டிடக்கலை அற்புதங்களை சுற்றி பார்க்கலாமா? பயணம் மற்றும் சுற்றுலா
    தென்னிந்தியாவின் அமைதியான மலைவாசஸ்தலங்களுக்கு போகலாமா ஒரு விசிட் மலைகள்
    வேற லெவல் விண்வெளி சுற்றுலா: அடுக்கு மண்டலத்தில் பலூன் சவாரிகளை நடத்தும் ஸ்டார்ட் அப்கள் விண்வெளி

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 2 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? விடுமுறை
    தொடர்ந்து பெய்து வரும் கனமழை; எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 3 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு செய்தி

    ஃபெஞ்சல் புயல் எதிரொலி; மின்கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு டிசம்பர் 10 வரை நீட்டிப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 6 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    ஃபெஞ்சல் புயல் பாதிப்பு எதிரொலி; 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு பள்ளிக்கல்வித்துறை
    வங்கக் கடலில் மேலும் இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு வானிலை ஆய்வு மையம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025