Loading...
"இந்த 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!" நாளை பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்! வானிலை மையம் தகவல்
கோவை, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

"இந்த 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!" நாளை பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்! வானிலை மையம் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 31, 2026
05:57 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, நாளை (ஆகஸ்ட் 1) தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்படி கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னறிவிப்பு

வரும் நாட்களுக்கான மழை முன்னறிவிப்பு

மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த இதர மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகப் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2 முதல் 4 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோரப் பகுதிகளில் மிதமான மழையும், ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் தொடர வாய்ப்புள்ளது.

சென்னை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் நிலவரம்

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நகரில் அதிகபட்ச வெப்பநிலையானது 100 டிகிரி ஃபாரன்ஹீட் (37.7°C) அளவை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையானது 82 டிகிரி ஃபாரன்ஹீட் (27.7°C) அளவை ஒட்டியும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT