LOADING...
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வங்கக்கடலில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வங்கக்கடலில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; வானிலை ஆய்வு மையம் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 03, 2026
05:46 pm

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று (ஜனவரி 3) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வறண்ட வானிலைக்கு இடையே இந்த திடீர் மாற்றத்தினால் சில மாவட்டங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவும். வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக காற்றில் ஈரப்பதம் அதிகரித்து, மேகமூட்டமான சூழல் நிலவும்.

மழை

மழைக்கு வாய்ப்பு

கடலோர மாவட்டங்கள்: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம்: திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகள்: உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம், மற்ற இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னை

சென்னை வானிலை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதிகபட்ச வெப்பநிலையாக 30°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 23°C பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மழை ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் லேசான மூடுபனி நிலவக்கூடும். இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக மலைப் பிரதேசங்கள் மற்றும் காடுகளை ஒட்டிய பகுதிகளில் குளிர் சற்று அதிகமாக இருக்கும். ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த வானிலை மாற்றம், விவசாயிகளுக்கு ஓரளவிற்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement