NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 
    மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

    எழுதியவர் Nivetha P
    May 20, 2023
    11:36 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தினை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் க்ரித்தி வர்மா மற்றும் அவர் தாயாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதோடு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பொதுத்தேர்வு செய்திகளை படித்த பொழுது மாணவர் க்ரித்தி வர்மாவின் தேர்ச்சி என் கவனத்தினை ஈர்த்தது.

    அவருக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். அவரது தாயாரிடமும் தொலைப்பேசியில் பேசினேன்.

    அவருக்கு கைகள் பொருத்திட தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

    தேர்ச்சி 

    கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்த தாயார் 

    மேலும் அவர், நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்று சிறந்து விளங்கிடவேண்டும்.

    அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும் என்று பதிவு செய்துள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தினை சேர்ந்த தம்பதி கஸ்தூரி-அருள்மூர்த்தி, இவர்களுக்கு க்ரித்தி வர்மா என்னும் மகன் உள்ளார்.

    க்ரித்திவர்மாவுக்கு 4 வயது இருக்கும்பொழுது வீட்டின் மாடியில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

    அப்போது எதிர்பாராவிதமாக வீட்டை ஒட்டியுள்ள மின் கம்பத்திலிருந்து சென்ற மின்கம்பியினை பிடித்துள்ளார்.

    இதில் மின்சாரம் தாக்கி க்ரித்தி வர்மா தனது 2 கைகளையும் இழந்துள்ளார்.

    தனது இரு கைகளை இழந்த மகனை தாயார் கஸ்தூரி தனது சொந்த ஊரான ஜீனூர் கிராமத்திற்கு அழைத்துச்சென்று கூலிவேலை செய்து தனது மகனை படிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    பள்ளி மாணவர்கள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மு.க ஸ்டாலின்

    சட்டமேதை அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மரியாதை  அம்பேத்கர்
    திமுக தலைவர்களின் சொத்து மதிப்பை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை  திமுக
    துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து-உயிரிழந்த 2 தமிழர்களுக்கு நிவாரணத்தொகை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு
    பள்ளி கட்டணத்தினை செலுத்தாத மாணவர்களை வெளியில் நிறுத்த கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்  தமிழ்நாடு

    பள்ளி மாணவர்கள்

    சார், மேடம் என்று அழைக்கக்கூடாது: கேரளாவில் உத்தரவு இந்தியா
    இந்திய பணக்காரர்களில் 1% நபர்களிடம், நாட்டின் 40% சொத்து உள்ளது: ஆக்ஸ்ஃபேம் கவலை! இந்தியா
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025