NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 
    மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 
    இந்தியா

    மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

    எழுதியவர் Nivetha P
    May 20, 2023 | 11:36 am 1 நிமிட வாசிப்பு
    மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 
    மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தினை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் க்ரித்தி வர்மா மற்றும் அவர் தாயாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதோடு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பொதுத்தேர்வு செய்திகளை படித்த பொழுது மாணவர் க்ரித்தி வர்மாவின் தேர்ச்சி என் கவனத்தினை ஈர்த்தது. அவருக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். அவரது தாயாரிடமும் தொலைப்பேசியில் பேசினேன். அவருக்கு கைகள் பொருத்திட தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

    கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்த தாயார் 

    மேலும் அவர், நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்று சிறந்து விளங்கிடவேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும் என்று பதிவு செய்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தினை சேர்ந்த தம்பதி கஸ்தூரி-அருள்மூர்த்தி, இவர்களுக்கு க்ரித்தி வர்மா என்னும் மகன் உள்ளார். க்ரித்திவர்மாவுக்கு 4 வயது இருக்கும்பொழுது வீட்டின் மாடியில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக வீட்டை ஒட்டியுள்ள மின் கம்பத்திலிருந்து சென்ற மின்கம்பியினை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி க்ரித்தி வர்மா தனது 2 கைகளையும் இழந்துள்ளார். தனது இரு கைகளை இழந்த மகனை தாயார் கஸ்தூரி தனது சொந்த ஊரான ஜீனூர் கிராமத்திற்கு அழைத்துச்சென்று கூலிவேலை செய்து தனது மகனை படிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மு.க ஸ்டாலின்
    பள்ளி மாணவர்கள்

    மு.க ஸ்டாலின்

    கர்நாடகா முதல்வராக பதவியேற்கிறார் சித்தராமையா  கர்நாடகா
    தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ரூ.92.50 கோடி மதிப்பில் 3 மினி டைடல் பூங்கா  தமிழ்நாடு
    கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை  விழுப்புரம்
    கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு அளிக்கப்பட்ட நிவாரண தொகைக்கான காசோலை ரத்து  விழுப்புரம்

    பள்ளி மாணவர்கள்

    10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்: பெரம்பலூர் மாவட்டம் சாதனை!  கல்லூரி மாணவர்கள்
    அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் விசா பற்றிய அறிவிப்பு! அமெரிக்கா
    பி.இ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களை விட கலை & அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதிகம்!  கல்லூரி மாணவர்கள்
    தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு  தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023