Loading...
பைக் டாக்சி ஓட்டினால் அபராதம் - தமிழக அரசு அறிவிப்பு: பொதுமக்கள் அறிய வேண்டிய முக்கியத் தகவல்கள்
தமிழகத்தில் பைக் டாக்சி ஓட்டினால் அபராதம்

பைக் டாக்சி ஓட்டினால் அபராதம் - தமிழக அரசு அறிவிப்பு: பொதுமக்கள் அறிய வேண்டிய முக்கியத் தகவல்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 03, 2026
06:13 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் உரிய அனுமதியின்றி இயங்கி வரும் பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும், இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இக்கொள்கை சார்ந்த பிரச்சனையில் பைக் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து விரைவாக விரிவான கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. மேலும், இதுகுறித்து விரிவான பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு தமிழக போக்குவரத்துத் துறை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அரசு விளக்கம்

நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அளித்த முக்கிய விளக்கம்

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் விரிவான விளக்கங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

அதில், மாநிலத்தில் பைக் டாக்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக முதலில் ஒரு தனிக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டது.

அந்த ஆய்வுக் குழு அமைக்கப்பட்ட பின்னரே, பைக் டாக்சி சேவைக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிப்பதா அல்லது நிரந்தரமாக மறுப்பதா என்பது குறித்த இறுதி முடிவை எடுக்க முடியும் என்று அரசுத் தரப்பில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது.

தடை

கொள்கை முடிவு வரை பைக் டாக்சிகளுக்குத் தடை

இறுதி கொள்கை முடிவு எடுக்கப்படும் வரை தமிழ்நாட்டில் பைக் டாக்சிகளை இயக்குவதற்கு எந்தவிதமான அனுமதியும் கிடையாது என்று அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

தற்போதைய நடைமுறை விதிகளையும் தடையையும் மீறி சட்டவிரோதமாகப் பைக் டாக்சிகளை இயக்கி வரும் ஓட்டுநர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுத் தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பைக் டாக்சி நிறுவனங்கள் மற்றும் அதனை நம்பியுள்ள ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT