NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆளுநரின் வெளிநடப்பை கடுமையாக கண்டிக்கும் அரசியல் தலைவர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆளுநரின் வெளிநடப்பை கடுமையாக கண்டிக்கும் அரசியல் தலைவர்கள்
    ஆளுநர் வெளிநடப்பு செய்ததை விமர்சிக்கும் அரசியல் வாட்டாரங்கள்

    ஆளுநரின் வெளிநடப்பை கடுமையாக கண்டிக்கும் அரசியல் தலைவர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 10, 2023
    09:20 am

    செய்தி முன்னோட்டம்

    இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் ஜனவரி 9 அன்று நடைபெற்றது. இதை ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய உரையுடன் தொடங்கி வைத்தார்.

    ஆளுநரின் உரையின் போது தமிழ்நாடு, திராவிடம், அண்ணா, பெரியார், கலைஞர், அம்பேத்கர், போன்ற வார்த்தைகளை வேண்டுமென்றே தவிர்த்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

    இது குறித்து, முதல்வர் ஸ்டாலின், "தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை." என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கு எதிராக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    முதல்வர் ஸ்டாலின் இதை பற்றி பேசி முடிக்கும் முன்பே ஆளுநர் பாதியில் வெளியேறினார்.

    ஒரு முதல்வர் பேசி கொண்டிருக்கும் போது ஆளுநர் வெளிநடப்பு செய்வது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

    இதனால், தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

    சபாநாயகர்

    அரசியல் தலைவர்களின் 'ரியாக்சன்'

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "ஆளுநரை வைத்துக்கொண்டே முதலமைச்சர் அப்படி பேசியது மரபுக்கு எதிரானது" என்று விமர்சித்துள்ளார்.

    சபாநாயகர் அப்பாவு, "தேசிய கீதம் இசைக்கும் முன்பே வெளியேறி நாட்டை அவமானப்படுத்திவிட்டார்" என்று கூறி இருக்கிறார்.

    இதை எதிர்த்து வரும் ஜனவரி 13ஆம் தேதி தங்கள் கட்சி சார்பாக ஆளுநர் மாளிகையை முற்றுகை செய்ய போவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

    பாமக தலைவர் ராமதாஸ், "இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயலாகும்!" என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.

    பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "ஆளுநர் உரையில் திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு அது ஒன்றும் திமுகவின் கட்சிக் கூட்டம் அல்ல" என்று விமர்சித்திருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? இந்தியா
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு செய்தி
    இயந்திரமயமாகும் சுங்க சாவடிகள்: மத்திய இணை அமைச்சர் இந்தியா

    தமிழ்நாடு செய்தி

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா துவக்கம்-அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார் தமிழ்நாடு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் ரயில்கள்
    தமிழகத்தில் எங்கும் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை-விளக்கமளிக்கும் அமைச்சர் கீதா ஜீவன் இந்தியா
    தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை - 236 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆவின் நிர்வாகம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025