NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்றோடு ஓய்வுபெறுகிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றோடு ஓய்வுபெறுகிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு 
    இன்றோடு ஓய்வுபெறுகிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு

    இன்றோடு ஓய்வுபெறுகிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு 

    எழுதியவர் Nivetha P
    Jun 30, 2023
    01:05 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமாரி மாவட்டத்தினை சேர்ந்தவர் திரு.டிஜிபி.சைலேந்திர பாபு.

    இவர் எம்பிஏ, பிஎச்டி உள்ளிட்ட பல பட்டபடிப்புகளை படித்துள்ளநிலையில், சைபர் கிரைம் ஆய்வுக்குறித்த படிப்பினையும் படித்துள்ளார்.

    1987ம்ஆண்டு தமிழக காவல்துறை ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

    சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்டக்குழுவின் ஐஜி-யாக இவர் பணியாற்றியுள்ளார்.

    பின்னர், 2004ம்ஆண்டு வடசென்னை இணை ஆணையராக பொறுப்பேற்ற இவர் மாமூல் வாங்கும் ரவுடிகள், தாதாக்கள் உள்ளிட்டோருக்கான தீர்வினை கொண்டுவந்தார்.

    தற்போது சென்னையில் ரவுடிகள் அட்டகாசம் அந்தளவுக்கு இல்லை என்பதற்கு சைலேந்திரபாபு அவர்கள் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள்தான் காரணம் என்று தமிழக காவல்துறையே கூறியுள்ளது.

    2010ம்ஆண்டு கோவையில் காவல்துறை ஆணையராக இவர் பொறுப்பேற்றபொழுது, பள்ளி மாணவர்களை கடத்திச்சென்று அவர்களை பாலியல் பலாத்காரம் செய்த மோகனகிருஷ்ணன் என்கவுண்டர்மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    சாதனை 

    சிறைவாசிகளுக்கு வாகனம் ஓட்டும் பயிற்சிக்கான நடவடிக்கையினை மேற்கொண்ட டிஜிபி 

    பின்னர் 2015ம்ஆண்டு சென்னையில் வெள்ளம் சூழ்ந்த நேரத்தில் கடலோரப்பாதுகாப்பு நீச்சல் குழுமத்துடன் களமிறங்கிய சைலேந்திரபாபு நீந்திச்சென்று வீட்டிற்குள் சிக்கிய மக்களைமீட்டு அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றார்.

    அதன்பின்னர் இவர் சிறைத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டநிலையில், தண்டனையினை அனுபவித்து வெளியேவரும் கைதிகளுக்கு வாழ்வாதாரத்தினை உறுதிச்செய்ய சிறைவாசிகளுக்கு வாகனம் ஓட்டும் பயிற்சியளிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    இவ்வாறு பல நலத்திட்டங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இவர் 2021ம் ஆண்டு தமிழக டிஜிபி'யாக பொறுப்பேற்றார்.

    பல்வேறு ஆபரேஷன்களை மேற்கொண்டு குற்றங்களை கட்டுக்குள் கொண்டுவந்துள்ள சைலேந்திர பாபு அவ்வப்போது மக்களுக்கான விழிப்புணர்வு வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவதையும் தனது வழக்கமாக கொண்டிருந்தார்.

    இந்நிலையில் அவர் இன்று(ஜூன்.,30)ஓய்வுப்பெறும் நிலையில், புது டிஜிபி'யாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கன்னியாகுமரி
    சைபர் கிரைம்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கன்னியாகுமரி

    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத் மு.க.ஸ்டாலின்
    விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் தமிழ்நாடு
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை மாவட்ட செய்திகள்
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள் இந்தியா

    சைபர் கிரைம்

    சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்? மன ஆரோக்கியம்
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!  தொழில்நுட்பம்
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  தொழில்நுட்பம்

    காவல்துறை

    மிசோரத்தில் ரூ.25.20 லட்சம் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!  இந்தியா
    கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை  மு.க ஸ்டாலின்
    கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்! காவல்துறை
    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி  காவல்துறை

    காவல்துறை

    சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் பலி - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்  தமிழ்நாடு
    கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம்  சென்னை
    சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு  விருதுநகர்
    தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்!  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025