Loading...
அமைச்சர்கள் பதவி பறிப்பு? உளவுத்துறை ரிப்போர்ட்டால் முதலமைச்சர் விஜய் எடுக்கவுள்ள அதிரடி முடிவு
உளவுத்துறை தரவுகளின் அடிப்படையில் முதலமைச்சர் இந்த முடிவை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது

அமைச்சர்கள் பதவி பறிப்பு? உளவுத்துறை ரிப்போர்ட்டால் முதலமைச்சர் விஜய் எடுக்கவுள்ள அதிரடி முடிவு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 03, 2026
12:49 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விரைவில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக DTNext செய்தி வெளியிட்டுள்ளது. தனது அமைச்சரவை சகாக்களின் செயல்பாடுகள் மற்றும் சர்ச்சைகள் குறித்து உளவுத்துறை மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் முதலமைச்சர் இந்த முடிவை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், அதன் பிறகு அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைவான செயல்திறன் மற்றும் தொடர் சர்ச்சைகளில் சிக்கியதன் காரணமாக, விஜய் தமிழன் பார்த்திபன்(போக்குவரத்துத் துறை), ஜெகதீஸ்வரி(சமூக நலன் மற்றும் மகளிர் நல மேம்பாட்டுத் துறை), சரத்குமார்(மனிதவள மேலாண்மைத் துறை), விஸ்வநாதன்(உயர்கல்வித் துறை - காங்கிரஸ்) ஆகிய 4 அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

இலாகா மாற்றங்கள்

இலாகா மாற்றங்கள் மற்றும் புதிய எதிர்பார்ப்புகள்

பதவி நீக்கம் தவிர, சில அமைச்சர்களின் நிர்வாக செயல்பாடுகளின் அடிப்படையில் அவர்களின் இலாகாக்களை மாற்றவும் முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

தவெகவை சேர்ந்த கீர்த்தனா, கமலி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ள காங்கிரஸின் ராஜேஸ்குமார் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விசிகவின் வன்னியரசும் வலுவான இலாகாவை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

தற்போது திட்டமிடப்பட்டுள்ள மாற்றம் முழுக்க முழுக்க செயல்திறன் சார்ந்ததாக இருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக நடைபெறவுள்ள அரசியல் சார்ந்த மாற்றத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக உறுப்பினர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோருக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT