Loading...
இனி ஆன்லைனில் அதிவேக கட்டிட அனுமதி! ஏஐ தொழில்நுட்பத்துடன் புதிய இணையதளம்! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
நகர்ப்புற கட்டிட அனுமதிக்கு AI தொழில்நுட்பத்துடன் புதிய இணையதளம்

இனி ஆன்லைனில் அதிவேக கட்டிட அனுமதி! ஏஐ தொழில்நுட்பத்துடன் புதிய இணையதளம்! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 27, 2026
03:00 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் முறையை அதிவேகமாகவும் எளிமையாகவும் மாற்றுவதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் விஜய், இந்த புதிய இணையதள வசதியை உடனடியாகத் தயார் செய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

காலதாமதம்

காலதாமதம் தவிர்க்கப்பட்டு வெளிப்படையான சேவை

தற்போது புதிய கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவதில் நிலவி வரும் காலதாமதத்தைத் தவிர்ப்பதே இந்த புதிய ஏஐ இணையதளத்தின் முதன்மை நோக்கமாகும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் விண்ணப்பங்கள் மற்றும் வரைபடங்கள் நொடிகளில் பரிசீலிக்கப்பட்டு, மனிதத் தலையீடின்றி விரைவாக ஒப்புதல் அளிக்கப்படும்.

இதன் மூலம் கட்டிட அனுமதி கோரும் பொதுமக்களுக்கும் மனைக் உரிமையாளர்களுக்கும் எந்தவித தடங்கலும் இன்றி, மிகவும் வெளிப்படையான மற்றும் நம்பகமான சேவைகள் தடையின்றி கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT