NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக மதுபான கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் - டெண்டர் அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக மதுபான கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் - டெண்டர் அறிவிப்பு 
    தமிழக மதுபான கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் - டெண்டர் அறிவிப்பு

    தமிழக மதுபான கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் - டெண்டர் அறிவிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Aug 05, 2023
    04:11 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் அதிக கட்டணத்தினை பெறுவதை தடுக்கும் முயற்சியாக ஸ்வைப்பிங் மெஷின் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் அரசு மாதுபானங்களை விற்பனை செய்து வருகிறது.

    அதன்படி தமிழகம் முழுவதும் 4810 டாஸ்மாக் மதுபான கடைகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், மது வாங்குவோரிடம் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்னும் குற்றச்சாட்டு அண்மையில் அதிகளவில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

    அதுமட்டுமல்லாமல் இவ்வாறு கூடுதலாக வசூலிக்கப்படும் ரூ.10 அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கொடுக்கப்படுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் கூறும் வீடியோ அவ்வப்போது இணையத்தில் வெளியாகிறது.

    டாஸ்மாக் 

    ஆண்டுதோறும் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய்

    இந்நிலையில் இது போன்ற குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் முறையினை கொண்டு வர டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    இதனை தொடர்ந்து தமிழகத்தில் செயல்பட்டு வரும் 4810 டாஸ்மாக் மதுபான கடைகளிலும் ஸ்வைப்பிங் மெஷின் பண பரிவர்த்தனையினை மேற்கொள்ள வங்கிகளுக்கு அழைப்பு விடுக்கும் விதத்தில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு இந்த மதுபான விற்பனையினை டாஸ்மாக் நிறுவனம் மூலம் நடத்தி வரும் நிலையில், இதன் மூலம் அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்படுகிறது என்று கூறப்படுகிறது.

    இதனிடையே பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    தமிழ்நாடு
    டாஸ்மாக்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழக அரசு

    ஓய்வூதியம் பெறுவோருக்கு புகைப்படத்துடன் கூடிய மருத்துவ காப்பீடு அடையாள அட்டை  ஓய்வூதியம்
    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலம்: தமிழக அரசு அரசாணை  சென்னை
    மாத வருமானமாக ரூ.10,000 சம்பாதிக்கும் சிறை கைதிகள்  தமிழ்நாடு
    கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை - தமிழக அரசு திட்டம்  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை  பருவமழை
    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி
    நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் படங்கள் நீக்கப்படாது: சென்னை உயர்நீதிமன்றம்  சென்னை உயர் நீதிமன்றம்
    சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி தமிழகம்

    டாஸ்மாக்

    500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி மது
    தமிழகத்தில் 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படும் - டாஸ்மாக் நிர்வாகம்  தமிழ்நாடு
    டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை - அமைச்சர் முத்துசாமி விளக்கம்  தமிழ்நாடு
    நிர்ணயம் செய்த விலையினை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் - டாஸ்மாக் நிர்வாகம்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025