NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விவாகரத்து செய்வதற்கு இனி 6 மாத கட்டாயக் காத்திருப்பு கிடையாது: உச்ச நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    விவாகரத்து செய்வதற்கு இனி 6 மாத கட்டாயக் காத்திருப்பு கிடையாது: உச்ச நீதிமன்றம் 
    திருமண முறிவின் அடிப்படையில் விவாகரத்து வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது

    விவாகரத்து செய்வதற்கு இனி 6 மாத கட்டாயக் காத்திருப்பு கிடையாது: உச்ச நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    May 01, 2023
    01:55 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்டப்பிரிவு 142-ன் கீழ் "மீளமுடியாத திருமண முறிவு" என்ற அடிப்படையில் திருமணங்களை கலைக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் இன்று(மே 1) கூறியுள்ளது.

    பரஸ்பர சம்மதத்தின் மூலம் விவாகரத்து பெறுவதற்கு கொடுக்கப்பட்ட ஆறு மாதங்கள் கட்டாயக் காத்திருப்பு காலத்தை நீக்கிவிடலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அதனால், பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் கோரப்படும் விவாகரத்துக்கு முன்பு இருந்த ஆறு மாத கட்டாயக் காத்திருப்பு நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது.

    "திருமணத்தின் மீளமுடியாத முறிவு எப்போது ஏற்படும் என்பதை தீர்மானிக்கக்கூடிய காரணிகளையும் நாங்கள் வகுத்துள்ளோம்" என்று நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, ஏஎஸ் ஓகா, விக்ரம் நாத் மற்றும் ஜேகே மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.

    details

    பராமரிப்பு, ஜீவனாம்சம் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் சமமாக பிரிக்கப்பட்டது 

    மேலும், பராமரிப்பு, ஜீவனாம்சம் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான பங்கு பிரிவினைகளையும் இந்த அமர்வு சமமாக வகுத்துள்ளது.

    142வது சட்டபிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் பரந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி, பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெறுவதற்கான கட்டாயக் காத்திருப்பு காலத்தை தள்ளுபடி செய்ய முடியுமா என்ற பிரச்னைக்காகவே இந்த அரசியல் சாசன அமர்வு கூடியது.

    எனினும், இந்த விசாரணையின் போது, ​​மீளமுடியாத திருமண முறிவு காரணமாக திருமணங்களை கலைக்க முடியுமா என்ற பிரச்சினையையும் பரிசீலிக்க இந்த அரசியல் சாசன அமர்வு முடிவு செய்தது.

    அதன் படி, ​​மீளமுடியாத திருமண முறிவு காரணமாக திருமணங்களை கலைக்க முடியும் என்ற முடிவை நீதிபதிகள் எடுத்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக வழக்கு - உயர் நீதிமன்றத்தில் முறையீடு  ஆன்லைன் விளையாட்டு
    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பலி மாநிலங்கள்
    SCO உச்சி மாநாடு: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்பில்லை பாகிஸ்தான்
    திரையரங்கில் லேப்டாப்பில் வேலை செய்த நபர் - வைரலாகும் வீடியோ!  ட்ரெண்டிங் வீடியோ

    உச்ச நீதிமன்றம்

    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக
    நகரங்களுக்கு பெயர் மாற்ற கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் இந்தியா
    தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க இன்றே கடைசி நாள் தமிழ்நாடு
    ராஜீவ் காந்தி கொலை வழக்கு - விடுதலையானார் நாடு திரும்புவதில் சிக்கல் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025