NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிபிஐ கைது நியாயமற்றது; டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிபிஐ கைது நியாயமற்றது; டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

    சிபிஐ கைது நியாயமற்றது; டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 13, 2024
    10:58 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) ஜாமீன் வழங்கியது.

    சிபிஐ கைது செய்தது நியாயமற்றது என்று கூறிய உச்ச நீதிமன்றம், நீண்ட காலம் சிறையில் இருப்பது அநியாயமாக சுதந்திரத்தை பறிப்பதாகும் என்று வலியுறுத்தியது.

    இருப்பினும், நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிபிஐயால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது செல்லுபடியாகும் என்றும், இந்த கைது சட்டத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    உச்சநீதிமன்றம் உத்தரவு

    Supreme Court grants bail to Delhi Chief Minister and AAP national convener Arvind Kejriwal in a corruption case registered by CBI in the alleged excise policy scam.

    Supreme Court says prolonged incarceration amounts to unjust deprivation of liberty. pic.twitter.com/6LoZkISNO4

    — ANI (@ANI) September 13, 2024

    நான்காவது தலைவர்

    மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற நான்காவது அரசியல் தலைவர்

    டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயர் மற்றும் பாரத ராஷ்டிர சமிதியின் கே.கவிதா ஆகியோருக்குப் பிறகு இந்த வழக்கில் சிறையிலிருந்து வெளியேறும் நான்காவது உயர்மட்டத் அரசியல் தலைவர் கெஜ்ரிவால் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாகக், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் மார்ச் 21 அன்று அமலாக்கத்துறையால் முதன்முதலில் கைது செய்யப்பட்டார்.

    அமலாக்கத்துறையின் காவலில் இருந்தபோது, ​​ஊழல் வழக்கில் சிபிஐயால் ஜூன் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சில வாரங்களுக்குப் பிறகு, ஜூலை 12 அன்று, அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

    இருப்பினும், சிபிஐயால் கைது செய்யப்பட்டதால் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    'யோகி ஆதித்யநாத் தான் பிரதமர் மோடியின் அடுத்த குறி': சிறையில் இருந்து வெளியேறிய அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு  டெல்லி
    'மோடிக்கு 75 வயது ஆனாலும் அவர் தான் பிரதமராக வருவார்': அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதில் இந்தியா
    இலவச மின்சாரம், சீனாவிடமிருந்து நிலத்தை மீட்பது உட்பட அரவிந்த் கெஜ்ரிவாலின் 10 தேர்தல் வாக்குறுதிகள்  இந்தியா
     'டெல்லி மதுபான வழக்கில் ஆம் ஆத்மி கட்சி குற்றவாளியாக அறிவிக்கப்பட உள்ளது': அமலாக்கத்துறை  டெல்லி

    டெல்லி

    டெல்லியை ஆட்டிப் படைக்கும் கனமழை, வெள்ளம்: 3 பேரின் உடல்கள் மீட்பு  கனமழை
    டெல்லி விமான நிலைய கூரை இடிந்து விழுந்ததை அடுத்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஆய்வு  இந்தியா
    டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 மூடப்பட்டதால் 22,000 பயணிகள் பாதிப்பு  விமான நிலையம்
    சிறையில் உள்ள ஜம்மு காஷ்மீர் எம்பி ரஷீத் பதவிப் பிரமாணம் செய்யலாம்: என்ஐஏ ஜம்மு காஷ்மீர்

    உச்ச நீதிமன்றம்

     "கைதுக்கான காரணங்கள் வழங்கப்படவில்லை": நியூஸ்கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு டெல்லி
    உத்தரகாண்டில் பயங்கர காட்டுத் தீ: வன ஊழியர்கள் தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்டதால் உச்ச நீதிமன்றம் காட்டம்  உத்தரகாண்ட்
    மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு  செந்தில் பாலாஜி
    வாக்குச் சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு வாக்கு சாவடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025