
டாஸ்மாக் வழக்கில் எல்லை மீறி செயல்படுவதாக அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்; வழக்கு விசாரணைக்கு தடை
செய்தி முன்னோட்டம்
இந்திய உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் அரசு நிறுவனமான டாஸ்மாக் நடத்தும் மதுபானக் கடைகளில் சோதனைகளை நடத்துவதில் அமலாக்கத்துறை ஆக்ரோஷமாகமாக நடந்து கொள்வதாக கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும் அந்த அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்து வரம்புகளையும் மீறுவதாக இருப்பதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
வியாழக்கிழமை (மே 22), தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் வெளியிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டது.
கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் மாநிலத்தின் ஏகபோக மதுபான விற்பனையாளரான டாஸ்மாக் உடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டாஸ்மாக்
டாஸ்மாக் தரப்பிற்கு ஆதரவாக கபில் சிபல் வாதம்
நடவடிக்கைகளின் போது, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில், நடவடிக்கைகளின் போது அமலாக்கத்துறை பல மொபைல் போன்களைக் கைப்பற்றி குளோன் செய்ததாகத் தெரிவித்தார்.
அமலாக்கத்துறை முன்பு, அதன் விசாரணையின் போது பல முறைகேடுகளை கண்டுபிடித்ததாகக் கூறியது.
இதில் கணக்கில் வராத ₹1,000 கோடி பணம், மற்றும் டாஸ்மாக்கின் டெண்டர் செயல்முறைகள், போக்குவரத்து மற்றும் நிறுவன பதிவுகள் தொடர்பான குற்றச்சாட்டு தரவு ஆகியவை அடங்கும்.
மேலும், மே 16 அன்று மீண்டும் சோதனைகள் நடத்தப்பட்டன, அதில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் பத்து இடங்கள் சோதனை செய்யப்பட்டன.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இப்போது அதன் கோடை விடுமுறை முடிவுக்கு வரும் வரை அடுத்த நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.