NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்ட சுதா மூர்த்தி: பிரதமர் மோடி அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்ட சுதா மூர்த்தி: பிரதமர் மோடி அறிவிப்பு 
    சமூக சேவைக்காக பத்ம பூஷன் விருது பெற்றவர் சுதா மூர்த்தி

    ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்ட சுதா மூர்த்தி: பிரதமர் மோடி அறிவிப்பு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 08, 2024
    02:27 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கல்வியாளரும் எழுத்தாளருமான சுதா மூர்த்தி ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

    எக்ஸ்-இல் ஒரு பதிவில் அவர் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

    "இந்திய குடியரசுத் தலைவர், @SmtSudhaMurty Ji ஐ ராஜ்யசபாவிற்கு பரிந்துரைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சமூக பணி, தொண்டு மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா ஜியின் பங்களிப்பு மகத்தானது மற்றும் ஊக்கமளிக்கிறது" என்று பிரதமர் மோடி எழுதினார்.

    சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வெளியிடப்பட்ட தனது அறிவிப்பில், ராஜ்யசபையில் மூர்த்தியின் இருப்பு, நாட்டின் தலைவிதியை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் ஆற்றலை எடுத்துக்காட்டும் நாரி சக்திக்கு (பெண்கள் சக்தி) ஒரு சக்திவாய்ந்த சான்றாகும் என்று பிரதமர் கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    பிரதமர் மோடி அறிவிப்பு 

    I am delighted that the President of India has nominated @SmtSudhaMurty Ji to the Rajya Sabha. Sudha Ji's contributions to diverse fields including social work, philanthropy and education have been immense and inspiring. Her presence in the Rajya Sabha is a powerful testament to… pic.twitter.com/lL2b0nVZ8F

    — Narendra Modi (@narendramodi) March 8, 2024

    சுதா மூர்த்தி

    சுதா மூர்த்தி பற்றி ஒரு சிறு குறிப்பு

    சமூக சேவைக்காக பத்ம பூஷன் விருது பெற்ற சுதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி.

    கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த எழுத்தாளர்.

    இவர் வென்ச்சர் கேபிடலிஸ்ட் அக்ஷதா மூர்த்தியை மணந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்க்கின் மாமியார்.

    தற்போது வெளியூர் சென்றிருக்கும் சுதா மூர்த்தி, வேட்புமனு தாக்கல் செய்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, "இது எனக்கு கிடைத்த பெரிய மகளிர் தின பரிசு. நாட்டுக்காக உழைக்க வேண்டியது புதிய பொறுப்பு" என்றார்.

    கர்நாடகாவின் ஷிகானில் பிறந்த சுதா மூர்த்தி, கணினி விஞ்ஞானி மற்றும் பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

    டாடா இன்ஜினியரிங் மற்றும் லோகோமோட்டிவ் நிறுவனத்தில் (டெல்கோ) பணியமர்த்தப்பட்ட முதல் பெண் பொறியாளர் என்ற பெருமையையும் கொண்டவர் சுதா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பிரதமர் மோடி

    'பாஜக தலைவர் எல்கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது': பிரதமர் மோடி   பாஜக
    "இந்தியர்கள் சோம்பேறிகள் என்று நேரு நினைத்தார்": எதிர்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி  நாடாளுமன்றம்
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து பிரிட்டன்
    பொதுத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று உரையாற்றினார் பிரதமர் மோடி காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025